search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணமாக தொங்கிய"

    • சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தில் சண்முகம் ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மேலும் சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஜம்பு என்கிற சண்முகம் (40), ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அதிகாலை சண்முகம் சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரி யவந்ததும் சென்னிமலை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×