search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் விவகாரம்"

    பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். #PollachiAbuseCase #DMK #Kanimozhi
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. 

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். 

    பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்து திருவள்ளுவர் திடலில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.



    அப்போது பேசிய கனிமொழி, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது. ஏழு ஆண்டுகளாக ஒரு நெட்வொர்க் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. ஆனால் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    காவல்துறை யாருக்கு வேலை செய்கிறார்கள்...? பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளிவரும் அளவிற்கு காவல் துறையினர் நடந்து கொண்டுள்ளனர் என கண்டனம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழியை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்தில்
    கைதான அவரை போலீசார் விடுவித்தனர். #PollachiAbuseCase #DMK #Kanimozhi 
    சிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று நிர்மலாதேவி கூறினார். #NirmalaDevi
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரை பாலியல் பேரத்திற்கு அழைத்து அவர்களை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நிர்மலாதேவி உள்பட 3 பேர் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதைதொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து அவர்கள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்து வரப்பட்டு, மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். முடிவில் இந்த வழக்கை நீதிபதி லியாத் அலி, வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவியிடம் “ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராக வந்தபோது, உறவினர்களை சந்திக்க விரும்புவதாக கூறினீர்கள். யாராவது உங்களை சிறையில் வந்து சந்தித்தார்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு நிர்மலாதேவி கூறும்போது, “சிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அது தனக்கு வருத்தம் அளிக்கிறது” என கூறினார். பின்னர் நிர்மலாதேவி உள்பட 3 பேரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். #NirmalaDevi

    ×