search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலாற்றில் மணல்"

    • டிராக்டர் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தோலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாரத் (வயது37). இவர் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பாலாற்றில் டிராக்டர் மூலம் மணல் கடத்தினார்.

    திருப்பத்தூர் எஸ்.பி. தனிப்படை போலீசார் டிராக்டரில் மணல் ஏற்றி வந்த பாரத்தை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் பாரத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×