search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலருவி எக்ஸ்பிரஸ்"

    • வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள சில ரெயில் நிறுத்தங்களில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் போது பாவூர்சத்திரத்திலும், பாலக்காட்டில் இருந்து நெல்லை செல்லும் போது கீழக்கடையம் ரெயில் நிலையத்திலும் வரும் புதன்கிழமை முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    வண்டி எண்: 16791/16792 நெல்லை-பாலக்காடு-நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக் கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை என 7 ரெயில் நிலை யங்களில் நின்று சென்றது. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் அந்த ரெயில் தனது இயக்கத்தை தொடங்கிய போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.

    இந்நிலையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று தற்போது கூடுதல் நிறுத்தங்கள் அளிக்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், 2 ஆண்டுக்கும் மேலான தொடர் கோரிக் கையை ஏற்று கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாவூர்சத்திரம் மற்றும் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வர்த்தகம் சார்ந்து கேரளாவிற்கு நிறைய பேர் பயணிப்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    • வியாபாரிகளும், பொதுமக்களும் கேரளா செல்ல இந்த பாலருவி ரெயில் உபயோகமாக இருந்து வந்தது.
    • 6 மாதத்தில் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கையாண்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ., மத்திய ரெயில்வே மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம் தென்காசி, கொல்லம் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு (வண்டி எண் 16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன் கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று சென்றது.

    இந்நிலையில் பாலக்காடு செல்லும்போது பாவூர்சத்தி ரத்திலும், பாலக்காட்டில் இருந்து வரும் போது கடை யத்திலும் நிற்காமல் செல்கிறது. இந்த ரெயில் மூலம் தமிழகத்தில் இருந்து வணிக ரீதியாக கடையம், பாவூர் சத்திரம் சுற்று வட்டார பொது மக்களும், வியாபாரிகளும் கேரளாவில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் செல்ல இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.

    கேரளா செல்ல இந்த பாலருவி ரெயில் உபயோகமாக இருந்து வந்தது. வர்த்தக ரீதியாக லாபம் தரும் நிலையங்களாக கணக்கி டப்பட்டு கடையம், பாவூர் சத்திரம் ரெயில் நிலையங்களுக்கு மீண்டும் நிறுத்தங்கள் வழங்குவதற்கு வர்த்தக ரீதியாகவும், இயக்கு தல் ரீதியாகவும் சாத்தியக் கூறுகள் உள்ளது என்று 4.10.21 அன்று மதுரை ரெயில்வே கோட்ட மூத்த இயக்குதல் பிரிவு மேலாளர், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை பயணி கள் போக்குவரத்து மேலாள ருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் கொரோ னாவுக்கு முன்பு கடையம், பாவூர் சத்திரம் ரெயில் நிலை யங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிலையில், அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை 6 மாத காலகட்டங்களில், 23.4 லட்சம் வருமானத்துடன் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரெயில் நிலையமும், 15.7 லட்சம் வருமானத்துடன் 1.31 லட்சம் பயணிகளை கடையம் ரெயில் நிலையமும் கையாண்டுள்ளது.

    மேலும் இந்த நெல்லை- தென்காசி வழித்தடத்தில் இயங்கும் ஒரே தினசரி விரைவு ரெயில் இதுவா கும். தமிழக அரசால் நியம னம் செய்யப்பட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையில், கடையம் மற்றும் பாவூர்சத்திரத்தில் இரு மார்க்கங்களிலும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். இதனை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கேரளாவின் பாலக்காடு - புனலூர் இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    சென்னை:

    கேரளாவின் பாலக்காடு முதல் புனலூர் வரை தினமும் இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்பட உள்ளது. முழுவதும் பொதுப்பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் வரும் 9-ம் தேதி முதல் நெல்லை வரை தனது சேவையை நீட்டிக்க உள்ளது.

    செங்கோட்டை - புனலூர் இடையே அகலரெயில் பாதை பணிகள் முடிவடைந்து சமீபத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது வாரம் இருமுறை கொல்லம் - தாம்பரம் இடையே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மிகுந்த பயன் தரும் என கூறப்படுகிறது.

    கொல்லம் - எடமன் வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பாசாஞ்சர் ரெயிலும் விரைவில் நெல்லைக்கு நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 
    ×