search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலம்"

    • பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதி
    • சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நல்லூர் பகுதியில் ரோட்டில் உள்ள பாலம் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அந்த பாலத்தை மாற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பாலப்பணிகள் தொடங்கப் பட்டதையடுத்து சுசீந்தி ரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு சென்ற பஸ்கள் அனைத்தும் வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக மருங்கூருக்கு இயக்கப்பட்டது. இந்த சாலை வழியாக பொது மக்கள் இருசக்கர வாக னங்களில் மற்றும் ஆட்டோக் களை செல்லும் வகையில் தற்காலிக பாலம் அமைக் கப்பட்டு இருந்தது. தற்காலிக பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் சென்று வந்தனர்.

    பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக தற்காலிகமாக அமைக்கப் பட்ட பாலம் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருங்கூரிலிருந்து சுசீந்திரத்திற்கு பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மருங்கூரிலிருந்து மயிலாடி, வழக்கம்பாறை வழியாக சுசீந்திரத்திற்கு வந்தனர். தற்காலிக பாலம் சேதமடைந் துள்ளதையடுத்து அந்த பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து தடை பட்டுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி தற்பொழுது நடைபெற்று வரும் பாலப்பணியை துரிதமாக முடித்து பஸ் போக்கு வரத்தை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் சேதம் அடைந்த தற்காலிக பாலத்தை உடனடி யாக சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறி னார்கள். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகா ரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ரெடிேமடு பாலங்களை பொருத்தி அதிகாரிகள் சாதனை
    • அடுத்த நாள் காலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது

    கோவை,

    கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் சாலை கட்டமைப்பு வசதிகள், பாலப்பணிகள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகின்றனர்.

    கோவை மாநகர பகுதியில் பகல்நேரத்தில் சாலைப்பணிகளை செய்வது மிகவும் சவாலான விஷயம். இந்தநிலையில் கோவை துடியலூர் பகுதியில் கழிவு நீர் ஓடைப்பாலம் அமைப்பது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி மாநகராட்சி 4-வது வார்டு தொழிற் பூங்காவிற்கு செல்லும் முக்கிய சாலையில், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி ஒரே நாள் இரவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நாள் காலையில் மேற்கண்ட பாலம்பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது.

    கோவை மாநகராட்சியில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி ஒரே நாள் இரவில் கழிவுநீரோடை பாலம் கட்டப்பட்டு உள்ளது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில் இது சிறிய பாலம் ஆகும். தற்போது இதற்கு ரெடிேமடு பாலங்கள் வந்து விட்டன. வேறு ஒரு இடத்தில் தயார் செய்து அப்படியே பொருத்தி விடலாம். அதே போலத்தான் நேற்று இரவும் அந்த இடத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது என்றனர். 

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்

    மார்த்தாண்டம் :

    களியக்காவிளை பேரூராட்சிட்பட்ட 9-வது வார்டு கைதக்குழியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலி ருந்து ரூ.15 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்ப ட்டது. இதனை விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்.

    களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினு லால்சிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்னகுமார், வட்டார தலைவர் ரவி சங்கர், பேரூராட்சி காங்கி ரஸ் கமிட்டி தலைவர் பென்னட், வார்டு உறுப்பினர்கள் ஜெயகலா, விஜயா, சுசீலா, ரிபாய், தாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்ட னர்.

    • கடந்த 2002-ல் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பாலம் பாதிப்படைந்தது.
    • புதியபாலம் கடந்த 2021-ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையை இணைக்க செங்கோட்டை குண்டாற்று பாலம் பெரும்பங்கு வகித்து வருகிறது. இந்த பாலம் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை நகருக்கு செல்லும் மிக முக்கிய பாலமாக உள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லுகிறது.

    புதிய பாலம்

    இந்நிலையில் இந்த பாலமானது மிகவும் பழமையானதால் அதன் சுற்று சுவர்களின் உறுதித் தன்மை குறைந்து விட்டது. கடந்த 2002-ல் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் இந்த பாலம் பாதிப்படைந்தது. இதனால் அந்த பாலத்தின் அருகில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 2019-ம் ஆண்டு பணிகளை தொடங்க உத்தர விடப்பட்டது. தொடர்ந்து பணிகள் முடிவடைந்த நிலையில் புதியபாலம் கடந்த 2021-ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த பாலத்தில் வழியாக கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் வந்து செல்லுகிறது.

    பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளில் இந்த பாலத்தின் மேல்பகுதியில் இணைப்பு பட்டையை யொட்டிய பகுதி யில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது மேல் பட்டை அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் பட்டையை யொட்டிய பகுதிகளில் கூடுதலாக அரிப்பு ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்படியாக இருக்கிறது. இந்த விரிசல் நாளடைவில் பெரிதாக வாய்ப்பு உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி பேராபத்து ஏற்படும் முன்பாக அதனை சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • 4 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக குளத்தின் மீது மண்ணை கொட்டி சாலை போடுகின்றனர்.
    • குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தில் நீரின் கொள்ளவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் கிராமத்தை சேர்ந்தவரும், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு பா.ஜ.க. மாநில செயலாளருமான மருது பாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தென்காசி-நெல்லை 4 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நாகல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தின் மீது சாலையின் இடது பக்கம் சுமார் 25 அடிகளும், வலது பக்கம் சுமார் 50 அடிகளும் சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மண்ணை கொட்டி சாலை போடுகின்றனர்.

    இந்த குளத்தின் நீர்பாசனத்தை நம்பி ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், நீர் ஆதாரத்திற்காகவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் பாலம் அமைத்து சாலை அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி மாரீஸ் பாலத்தை புதிதாக அமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம்
    • போக்குவரத்தில் மாற்றம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

    திருச்சி, 

    திருச்சி மாரீஸ் திரையரங்கம் அருகேயுள்ள சுமார் 150 ஆண்டுகள் பழைமையான ரெயில்வே மேம்பாலம், மிகவும் குறுகலாகவும், உயரமாகவும் இருப்பதால் அதை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒருபகுதியில் மழையால் மண் சரிந்ததால் ப ாலம் வலுவிழந்தது. இதனால் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்காக அந்தப் பாலம் ரூ.2.90 ே காடியில் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு புதிய பாலம் அமைப்பது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி ரூ.35 கோடிக்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, இந்த வழி போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். பின்னர் பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • பெரிய புலியூர் பகுதிக்கு சென்று வர பாலம் அமைத்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்
    • இந்த பகுதியில் விவசாய நிலங்கள், ஏராளமான குடி யிருப்புகள், விசைத்தறி க்கூடங்கள் உள்ளன.

    ஈரோடு,

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொது மக்கள் தங்களுடைய பிரச்ச னைகள் குறித்து கலெக்ட ரிடம் மனுக்களை வழங்கினர். அப்போது பெரிய புலியூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அ வர்கள் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் மாருதி நகர், அம்மன் நகர் உட்பட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் செல்ல பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பகுதியில் விவசாய நிலங்கள், ஏராளமான குடி யிருப்புகள், விசைத்தறி க்கூடங்கள் உள்ளன. எனவே இப்பகுதி மக்களுக்கு பாலம் அமைத்துக் கொடு த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது.
    • இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக்கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.

    தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர்.

    அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தடுப்பு சுவர்

    குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.

    உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது.எனவே நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கான்கிரீட் பாலம்

    குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து கோவை மாவட்டம் ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூரிலிருந்து பொங்கலூர், மேட்டுக்கடை வழியாக மருதூர், பொன்னாபுரம் பகுதிக்கு செல்லவும் இந்த ரோடுதான் முக்கியமாக விளங்கி வருகிறது. இதில் தும்பலப்பட்டியை ஒட்டி பாயும் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தில் வேறெங்கும்இல்லாதவிதமாக 2 ஓடைகள் இணைகின்றன. மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் பாயும்போது, தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பாலத்தில் பாசி பிடித்து இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மீது தார்ஜல்லி போட்டுள்ளனர். மேலும் பாலத்தின் வடக்கு பகுதியில் குறுகிய வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ரோட்டின் வளைவுகளை சரிசெய்து, உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாற்று பாதை இன்றி சுமார் 5 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
    • கிளை கால்வாயில் தண்ணீர் செல்வதையும் அவர் பார்வையிட்டார்

    கன்னியாகுமரி :

    இரணியல் கிளைக் கால்வாயில், பாலம் தாழ்வாக கட்டப்பட்டதால் தண்ணீர் பெருமளவு செல்லமுடியாமல் பாலம் பகுதியிலேயே தேங்கி காணப்படுகிறது. அதனால் புதுவிளை லட்சுமி புரம் போன்ற கடை வரம்பு பகுதிகளில் தண்ணீர் குறைவாக செல்லும் நிலை உள்ளது அதுபோல ெரயில்வே பாலத்தின் மேல் ஆத்திவிளை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை திறக்காததால் பரம்பை பகுதியில் துண்டிக்கப்பட்ட பாலத்திற்கு மாற்று பாதை இன்றி சுமார் 5 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

    இது குறித்த புகாரின்பேரில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். கிளை கால்வாயில் தண்ணீர் செல்வதையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இரணியல் பகுதியில் ரெயில்வே இரட்டை பாதை பணிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கால்வாய் பாலத்தின் வழியாக, முன்னோட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்தும், பாலத்தினை மேம்படுத்துவது குறித்தும் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இரணியல் கால்வாயானது பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடங்கி, புத்தன் அணையிலிருந்து பிரிந்து, சித்திரங்கோடு, திருவிதாங்கோடு, இரணியல் வழியாக சென்று சேரமங்கலம் மேஜர், சேரமங்கலம் மைனர், நெய்யூர், மண்டைக்காடு உள்ளிட்ட கடை வரம்பு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் பாசனத்திற்கு பேருதவியாக அமைந்து வருகிறது.

    இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது சப்-கலெக்டர் கவுசிக், தக்கலை பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் கதிரவன், தக்கலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி பிரிவு தலைவர் வக்கீல் ஜாண்சவுந்தர், முன்னாள் மாவட்ட பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ஜேக்கப் அருள்பால் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
    • வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முரு கன் தலைமையி லான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி, பழனியாண்டி, மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

    வேளாங்கண்ணி செருதூர் மீனவ கிரா மத்தின் இடையே வெள்ளையாறில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    அப்போது வெள்ளை யாற்றை தூர்வாரி தரைதட்டாமல் படகுகள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கிராம மீனவர்கள் கோரிக்கைமனு அளித்தனர்.

    மேலும் வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டுமென மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கோரிக்கை குழுவினருக்கு விடுத்தார்.

    தொடர்ந்து வெள்ளப்ப ள்ளம் மீனவ கிராமம், நாகை ஆதிதிராவிட நல விடுதி, நாகை அரசு மருத்துவமனை, நாகை புயல் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

    இதில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் ஏற வெட்டாற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
    • தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஒக்கூர் ஊராட்சியில் விளா ம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது.

    இக்கிராம த்தில் சுமார் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இக்கிராமத்திற்கு இதுநாள் வரை அரசு, தனியார் பஸ்களோ கிடையாது. நாகப்பட்டினம் செல்வதற்கு 10 கிலோ மீட்டர் நடந்து வந்து கீழ்வேளூரில்தான் பஸ் ஏற வேண்டும்.

    விளாம்பாக்கத்தில் இருந்து கீழ்வேளூர், நாகப்ப ட்டினம், திருவாரூரில் படிக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வயல் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் ஆற்றுக்கு அடுத்துள்ள கோகூர் சென்று பஸ் ஏற வெட்டா ற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதற்காக கிராமத்தினரே தட்டிப்பாலம் அமைத்து சென்று வருவதும் மழை, வெள்ளக் காலத்தில் அந்த தட்டிப்பாலம் ஆற்றில் அடித்து செல்வதுமாக தொடர்கதை யாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆற்றில் தற்போது உள்ள உடைந்த தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.

    எனவே உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் செல்லும் அளவுக்காவது சிமெண்ட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திறந்தவெளி மழைநீர் வடிகால் பகுதிகளில் மூடி அமைத்தல் பணி.
    • ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல்.

    திருநாகேஸ்வரம்:

    ஆடுதுறை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    துணை தலைவர் கமலா சேகர் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக செயல் அலுவலர் ராம்பிரசாத் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

    ஆடுதுறை பேரூராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை மற்றும் எரிபொருள் வைப்பறை அமைத்தல், 3-வது வார்டு ஆதிதிராவிடர் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.ஆர் பார்க் பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்தல், பேரூராட்சி உள்விளையாட்டு அரங்கம், டானரி தெரு பகுதியில் ரூ. 12.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கால்நடை மருத்துவமனை அருகிலும், உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் சிறிய மின் விசை பம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், நடராஜபுரம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி அருகே ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திறந்தவெளி மழைநீர் வடிகால் பகுதிகளில் மூடி அமைத்தல் பணி,

    டானரித்தெரு ,மருத்துவக்குடி, பாத்திமாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரித்தல் மற்றும் பழுது நீக்கம் பணிகள், கஞ்சான் மேட்டுத்தெரு மற்றும் கிருஷ்ணன் கோயில் தோப்பு தெருவை இணைக்கும் இணைப்பு பாலம் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் இருபுறமும் தடுப்புச் சுவருடன் புதிய பாலம் அமைக்கும் பணி, புது முஸ்லீம் தெருவில் ரூ.6.20லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவருடன் கூடிய சிறுபாலம் அமைத்தல் பணி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முடிவடைந்த பணிகள் குறித்தும் தற்போது மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.

    கூட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தரமாகவும் விலை மலிவாகவும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்கள் கிடைப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கூடிய உழவர் சந்தை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வார்டு கவுன்சிலர்கள் முத்துபீவி ஷாஜஹான், மீனாட்சி முனுசாமி, சரவணன், செல்வராணி சிவக்குமார், இளங்கோவன், சுகந்தி சுப்ரமணியன், சாந்தி குமார், ஷமீம் நிஷா ஷாஜஹான், கண்ணன், பால் தண்டாயுதம், மாலதி சிவக்கொழுந்து, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பரமேஸ்வரி சரவணக்குமார் நன்றி கூறினார்.

    ×