search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலமுருகன் கோவில்"

    • விநாயகர் கடை வீதி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பரம்பரை தர்ம கர்த்தா செய்திருந்தனர்.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் விநாயகர் கடை வீதி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை மகா கணபதி வழிபாடு, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, பூஜைகள், நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை 8.15 மணிக்கு மேல் கோபுர விமான கலசம் கும்பாபிஷேகம் தொடர்ந்து விநாயகர், மூலவர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், நவகிரகம் , இடும்பன் ஆகிய தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து தசதானம், தசா தரிசனம், மகா அபிஷேகம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பரம்பரை தர்ம கர்த்தா செய்திருந்தனர்.

    • கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழா 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    மூலவர் வழிகாட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுக்கப்பட்டு கோவில் மேல் தளத்தில் உள்ள 40 அடி உயர பீடத்தில் எண்ணெய் கொப்பரையில் 50 கிலோ நெய் மற்றும் திரி வைத்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    பாலமுருகன் 3 முறை கோவிலின் வெளிப்பி ரகார வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான இந்து நாடார் உறவின் முறை, இந்து நாடார் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • புலவன்குடியிருப்பு அரசன் நகரில் சித்தர்கள் வழிபடும் பழனிமலை பாலமுருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
    • இங்குள்ள முருகனை சித்தர் சாமி என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

    ஏர்வாடி:

    நெல்லை மாவட்டம் புலவன்குடியிருப்பு அரசன் நகரில் சித்தர்கள் வழிபடும் பழனிமலை பாலமுருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.

    முருக பெருமான் அறுபடை வீடுகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாக கருதப்படுகிறது. ஒரு சில கோவில்களில் முருக பெருமான் பக்தர்களை ஆட்கொண்டு அருள்புரிவது போல் இக்கோவிலும் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வெள்ளிமலை அடிவாரத்தில் சித்தர்கள் வாழும் பகுதியாக கருதப்படும் இடத்தில் உள்ளதால் இங்குள்ள முருகனை சித்தர் சாமி என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

    இந்த கோவிலில் நேற்று காலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, அபிஷேக அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இங்கு கேரள முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது. மாலையில் கோவிலில் உள்ள காமாட்சி அம்மன் சமேத வெள்ளி மலை நாதர், வலம்புரி விநாயகர் , பாலமுருகன் சன்னதிகளில் வேள்வி வளர்க்கப்பட்டு அபிஷேக தீபாரதனைகள் நடந்தது. சிவன், அம்பாள், விநாயகர், முருகன் சன்னதிகள் சேர்ந்து இருப்பதால் பக்தர்கள் திருகுடும்ப சாமி சன்னதி என அழைக்கின்றனர். இங்கு வழிபட்டால் திருமண தடை , பில்லி சூனியம், தொழில் நஷ்டம் போன்ற தடைகள் நிவர்த்தி ஆவதாக கூறுகின்றனர். இந்த ஆலயத்தை கணேஷ்குமார் சுவாமிகள் நிர்வகித்து பூஜை செய்து வருகிறார்.

    ×