search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு படைகள்"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை பாதுகாப்பு படையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர். #Securityforces #militanthideout #Kashmirmilitant
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் காஷ்மீர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்துவரும் பயங்கராவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பிலும் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட மன்டுனா என்ற கிராமத்தில் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் அங்கு பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்தனர்.



    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அப்பகுதி போலீசார் அந்த கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Securityforces #militanthideout  #Kashmirmilitant
    தீபாவளி பண்டிகையின் போது கோவில்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக வெளியான தகவலால் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் அடிக்கடி இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் மீண்டும் தீவிர தாக்குதல்களில் ஈடுபடுவதற்கு திட்டங்களை வகுத்துள்ளனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ராவல்பிண்டியில் லஷ்கர்-இ-தொய்பா தளபதியாக செயல்படும் மவுலவி அபுஷேக் இந்தியாவில் பல இடங்களை தாக்கப் போவதாக கடிதம் ஒன்று அனுப்பி உள்ளான்.

    இந்த கடிதம் ஜெய்பூர் ரெயில் நிலைய மேலாளருக்கு வந்துள்ளது. அதில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கோவில்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளான்.

    மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் எங்களுடைய தாக்குதல்கள் தீவிரமாக இருக்கும் என்று குறிப்பிட்டு எந்தெந்த இடங்களை தாக்கப் போகிறோம் என்ற விவரத்தையும் அதில் கூறி இருக்கிறான்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூர், ஜோத்பூர், பிகேனர், உதய்பூர், கங்கா நகர், ஹனுமன்கார், சித்தூர் கார் ரெயில் நிலையங்களையும், மத்திய பிரதேசத்தில் போபால், குவாலியர், ஜபல்பூர், காத்னி ரெயில் நிலையங்களையும், உஜ்ஜைனியில் உள்ள மகாகாளி கோவில், சாய்பாபா கோவில் ஆகியவற்றையும் தாக்குவோம் என்று அதில் தெரிவித்து இருக்கிறான்.

    அக்டோபர் 20-ந்தேதி வாக்கில் எங்களது தாக்குதல் நடைபெறும் என்று அவன் குறிப்பிட்டிருந்தான். நேற்று முன்தினம் 20-ந்தேதி ஆகும். எனவே அன்று தாக்குதல் நடக்கலாம் என கருதி வடமாநிலங்களில் அனைத்து இடங்களிலும் உஷார்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் எந்த தாக்குதலும் நடைபெறவில்லை.


    தீவிரவாதி தனது கடிதத்தில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த தாக்குதல் நடக்கும் என்று கூறியிருக்கிறான். வருகிற 6-ந்தேதி தீபாவளி பண்டிகை ஆகும். இந்த காலகட்டத்துக்குள் தாக்குதல் நடக்கலாம் என கருதி நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

    கோவில்கள், ரெயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    ×