search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்னாவில் இருந்து கஞ்சா கடத்தல்"

    • வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்
    • கைது செய்து விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே வந்து நின்றது.

    அதில் இருந்த 2 பெண்களிடம் சந்தேகத்தின் பேரில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். பையில் 5 கிலோ கஞ்சா இருப்பது அதனை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த ஜில்லி முகி (வயது 27) மற்றும் பூர்ணிமா(23) என்பது தெரிந்தது.

    பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×