search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக வேட்பாளர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்
    • புதுச்சேரி தொகுதியில் நமசிவாயம் போட்டியிடுகிறார்

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஏற்கனவே வெளியானது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

    இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதில், விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா களம் காண்கிறார். புதுச்சேரி தொகுதியில் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    திருவள்ளூர் - பொன்.பாலகணபதி,சென்னை வடக்கு - பால் கனகராஜ், திருவண்ணாமலை - அஸ்வத்தாமன், நாமக்கல் - கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகின்றனர்.

    திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி - வசந்தராஜன், கரூர் - செந்தில்நாதன், தென்காசி - ஜான்பாண்டியன், சிதம்பரம் - கார்திகேயனி, நாகப்பட்டினம் - எஸ்.ஜி.எம். ரமேஷ், தஞ்சாவூர் - முருகானந்தம் போட்டியிடுகின்றனர்.

    திருச்சி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், மதுரை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    மேலும், விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய விஜயதாரணிக்கு இந்த தேர்தலில் பாஜக வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

    முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

    இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் தனக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலையை, 'IAM WAITING' என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் வரவேற்றுள்ளார்.

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டி.
    • கிருஷ்ணகிரியில் நரசிம்மன் போட்டியிடுகிறார்.

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

    முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

    இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டி.
    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு.

    தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதில், 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    மேலும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

    பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் போட்டிறயிடுகின்றன.

    இந்நிலையில், 24 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் உடன் டெல்லி செல்வதாக கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார் என அண்ணாமலை கூறினார்.

    இதற்கிடையே, பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டதால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏற்கனவே 39 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்திடம் கொடுத்து இருக்கிறார்.
    • தமிழகத்தில் முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு வேட்பாளர்களில் ஒரு பகுதியினரை அறிவிப்பதை பாரதிய ஜனதா கடைபிடித்து வருகிறது.

    அதன்படி கடந்த 2-ந்தேதி பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட பல பிரபலங்கள் அந்த முதல் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 2-வது பட்டியலை நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெற இருக்கும் வேட்பாளர்கள் பற்றி டெல்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூடி இறுதி முடிவு எடுக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று இரவு நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மாநில தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநிலம் வாரியாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை வைத்து ஆலோசித்து வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    கடந்த முறை முதல் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்ட போது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய ஆலோசனை நடத்தினர். அதுபோல இன்று இரவும் நீண்ட நேரம் ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மத்திய மந்திரி சபையில் இருக்கும் மந்திரிகளில் சிலர் மேல்சபை எம்.பி.களாக உள்ளனர். அவர்களை இந்த தடவை தேர்தலில் போட்டியிட வைப்பது பற்றி இன்று நடக்கும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை எந்த தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

    2-வது பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் 150 பேர் வரை இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பெரும்பாலான வேட்பாளர்கள் பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    சில மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் பா.ஜ.க.வுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த இடங்களில் வேட்பாளர்கள் அறிவிப்பு சற்று தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    2-வது வேட்பாளர் பட்டியலில் மத்திய மந்திரிகள் நிதின்கட்கரி, அஸ்வினி சவ்பே, ஆர்.கே.சிங், நித்தியானந்தாராய் ஆகியோர் பெயர்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குஜராத், மத்திய பிரதேசம், பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பா.ஜ.க. தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட வேட்பாளர் தேர்வு பற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற சிலர் போட்டியிட தயக்கம் காட்டினார்கள். சில வேட்பாளர்கள் மீது சர்ச்சை எழுந்தது. எனவே அத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வேட்பாளரையும் இன்று அலசி ஆராய உள்ளனர்.

    குறிப்பாக இன்று வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் பின்னணியில் எந்தவித சர்ச்சையும் இருக்க கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார்.


    தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏற்கனவே 39 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்திடம் கொடுத்து இருக்கிறார். இன்று அவர் டெல்லி செல்கிறார்.

    அவர் முன்னிலையில் 39 தொகுதி வேட்பாளர்கள் பற்றி அலசி ஆராயப்பட உள்ளது. அதில் 7 அல்லது 8 தொகுதி வேட்பாளர்கள் பெயர் விவரம் 2-வது பட்டியலில் இடம்பெறும் என்று தெரிகிறது. எனவே தமிழகத்தில் முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வாய்ப்புள்ளது.

    மேலும் 2-வது வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள சிறுபான்மை இன கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

    • கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
    • டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தலையொட்டி, பா.ஜ.க. வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளிடமும், கடந்த 5-ந்தேதி மூத்த நிா்வாகிகளிடமும் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்டு பட்டியல் தயாரித்தனா்.

    இந்தப் பட்டியல் குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

    மூத்த நிா்வாகிகள் முன்னிலையில் தயாரிக்கப்பட்ட பட்டியலுடன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாஆகியோரை சந்தித்து ஆலோசிக்க போவதாக கூறிவிட்டு அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    தமிழக வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லியில் அமித்ஷா, நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்தித்தார். இதையடுத்து அமித்ஷாவும், நட்டாவும் தமிழக குழுவினருடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


    டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    இன்னும் எந்த கூட்டணியும் முழுமை அடையாமல் இழுபறியான நிலையே நீடிப்பதால் பா.ஜனதா தரப்பிலும் வேட்பாளர் அறிவிப்பில் குறைந்த எண்ணிக்கையில் அதாவது பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை முதலில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    அதன்படி 8 தொகுதிகள் வரை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    தமிழகத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகை குஷ்பு, டாக்டர் ஆனந்த பிரியா, டாக்டர் காயத்ரி, சுமதி வெங்கடேஷ், மகா லெட்சுமி, கார்த்தியாயினி, உமாரதி ஆகிய பெண் நிர்வாகிகள் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    பெரிய அளவில் கூட்டணி அமையாமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தால் குறைந்த பட்சம் 7 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ×