search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக தொண்டர்கள்"

    டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.

    ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்ததால் வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் செய்து வந்தனர்.

    டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திலும், மாநிலங்களில் உள்ள பா.ஜனதா அலுவலகங்களிலும் வெற்றி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

    இன்று காலை முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியதில் இருந்து பா.ஜனதா தொண்டர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் பா.ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றி விழாவை கொண்டாடினார்கள்.

    டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வர வர பா.ஜனதா அலுவலகத்துக்கு தொண்டர்கள் வருகை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தலைவர்களும், பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வர தொடங்கினார்கள்.

    இன்று மாலை பா.ஜனதா அலுவலகத்துக்கு மோடி, அமித்ஷா மற்றும் தலைவர்கள் வர உள்ளனர். அவர்கள் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    தமிழக பாஜகவினரிடையே வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களில் அதிக மக்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #BJP #PMModi #TNBJP
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக தொண்டர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி வருகிறார். 

    இந்நிலையில், தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் அதிகளவில் மக்களை இணைக்க வேண்டும்.



    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 70 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 47 லட்சம் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை அடைந்துள்ளது.

    மத்திய அரசின் திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் 4 லட்சம் இளைஞர்களும், வங்கிக்கடன்கள் மூலம் பல லட்சக்கணக்கானவர்களும் பலனடைந்து உள்ளனர். சாகர்மாலா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 3 துறைமுகங்கல் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். #BJP #PMModi #TNBJP
    ×