search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக அலுவலகம்"

    • தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை கணிசமான அளவுக்கு எம்.பி.க் கள் ஜெயிக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புகிறது.
    • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தேர்தல் காலங்களில் கூட்டணிகள் உறுதிப்படுத்தப்பட்டு வேட்பாளர்கள் அறி விக்கப்பட்ட பிறகுதான் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்படும்.

    ஆனால் இந்த முறை பா. ஜனதாவில் வேட்பாளர் பட்டியல் வரும் பின்னே. அலுவலகங்களை திறக்க வேண்டும் முன்னே என்ற ரீதியில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை உடனே திறக்கும்படி டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி எல்லா தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் திருநெல்வேலி தொகுதிக்கான அலுவலகம் திறக்கப்பட்டது.

    இன்று தென்சென்னை பாராளுமன்ற தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனை வேளச்சேரியில் ராம் நகர் 6-வது மெயின் ரோட்டில் இன்று திறக்கப்பட்டது. அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், இணை பொறுப்பாளர் முனியசாமி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை கணிசமான அளவுக்கு எம்.பி.க் கள் ஜெயிக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புகிறது. அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களையும் தேர்வு செய்கிறார்கள்.

    தென்சென்னையில் போட்டியிட கரு.நாகராஜன், திருப்பதி நாராயன், ரமேஷ் சிவா, எஸ்.ஜி.சூரியா உள்பட சிலர் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள்.

    ஆனால் டெல்லி மேலிடம் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தென்சென்னை தொகுதியில் நடிகை குஷ்பு களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அவருடைய பெயரும் பரிசீலனை பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி குஷ்புவை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-

    எனக்கு எதுவும் தெரியாது. எப்படியாவது கட்சி வெற்றி பெற ணே்டும் என்பதே எல்லோரது எண்ணம். தமிழ்நாட்டில் இருந்தும் பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஆசைப்படுகிறார். அதற்காகத்தான் எல்லோரும் உழைக்கிறோம். கட்சி என்ன கட்டளையிடுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் எங்கள் கடமை என்றார்.

    • மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • இம்பாலில் பா.ஜ.க. அலுவலகம் கூடியிருந்த கூட்டத்தினை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.

    இம்பால்:

    மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். இம்பால் நகரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள பா.ஜ.க.வின் பிராந்திய அலுவலகம் அருகே இன்று மாலை ஏராளமானோர் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி கலைக்க போலீசார் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கூட்டம் கலைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து அழைத்து சென்றபோது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று மாலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு 46 புதூர் அருகே பச்சைபாளி ரோடு பகுதியில் இருக்கும் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் முற்றுகையிட வந்த நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவல கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கட்சி அலுவலகத்திற்கு வரும் நிர்வாகிகள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதைத்தவிர வேறு யாரும் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்தால் அவர்களை போலீசார் அனுப்பி விடுகின்றனர்.

    • நந்தினி மற்றும் அவரது சகோதரியை ஊருக்கு செல்லுமாறு மதுரைக்கு செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டனர். இதனால் சற்று பரபரப்பு குறைந்தது.
    • மீண்டும் திண்டுக்கல் வந்த நந்தினி மற்றும் அவரது சகோதரி திண்டுக்கல்லில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்து சென்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. இவர் தனது தங்கை நிரஞ்சனியுடன் திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு வந்தார். பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனையடுத்து நகர்வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்து பா.ஜ.கவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நந்தினி மற்றும் அவரது சகோதரியை ஊருக்கு செல்லுமாறு மதுரைக்கு செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டனர். இதனால் சற்று பரபரப்பு குறைந்தது. ஆனால் மீண்டும் திண்டுக்கல் வந்த நந்தினி மற்றும் அவரது சகோதரி திண்டுக்கல்லில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்து சென்றனர்.

    இதனால் பா.ஜ.க நிர்வாகிகள் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். நந்தினி மற்றும் அவரது சகோதரிக்கு ஆதரவாக காங்கிரசார் திரண்டதால் பதட்டம் உருவானது. இதனைதொடர்ந்து சகோதரிகள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். சமூகஅமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்ட அவர்களை கைது செய்யக்கோரி பா.ஜ.கவினர் புகார் அளித்தனர்.

    ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ×