search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக்தாத்"

    ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Baghdadblast
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் சதர் நகரில் நேற்று மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயங்கரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இந்த வெடி குண்டு தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே சதர் நகரில் உள்ள வெடி மருந்து கிடங்கு இன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Baghdadblast
    ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பாக்தாத்:

    இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பாக்தாத்தில் அமைந்துள்ள சத் நகரில் வெடி மருந்து கிடங்கு உள்ளது. இங்கு கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், நேற்று இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்தனர். வெடி விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் நேற்று இரவு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#Suicideattack
    பாக்தாத்:

    இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்' என தெரிவித்துள்ளனர்.

    மேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #Baghdad #Suicideattack
    ×