search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் படகு"

    • இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகு அத்துமீறி நுழைந்தது.
    • படகை கைப்பற்றிய கடலோர காவல்படை ரூ.300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்தனர்.

    புதுடெல்லி:

    இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். மேலும் படகிலிருந்த ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக இந்திய கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினருடன் இணைந்து மேற்கோண்ட கூட்டு நடவடிக்கையில், இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகிலிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சுமார் 40 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக படகு ஓகாவுக்கு கொண்டு வரப்படுகிறது என பதிவிட்டுள்ளது.

    • இந்திய கடலோர காவல்படை, குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து ரோந்து பணி.
    • பாகிஸ்தான் படகை மறித்து அதிலிருந்தவர்களை கைது செய்தனர்.

    அகமதாபாத்:

    போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படையும், குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டது. நேற்றிரவு பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்று, சந்தேகத்திற்கிடமான வகையில் குஜராத் அருகே கடற் பகுதிக்குள் வந்தது. இதையடுத்து இரண்டு ரோந்து கப்பல்கள் மூலம் அங்கு விரைந்த இந்திய கடலோர காவல் படையினர் அந்த படகை மறித்து அதிலிருந்தவர்களை கைது செய்தனர்.  


    இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் 40 கிலோ கிராம் எடையுள்ள போதை பொருளை அவர்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர் மேல் விசாரணைக்காக அந்த படகை ஜக்காவுக்கு கொண்டு சென்றனர்.

    ×