என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ்நிலையத்தில் அலைமோதி"
- தொடர் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பினர்
- சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது
வேலூர்:
அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே விடுமுறை நாட்களாகி விட்டது. இடையில் 3ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும் என்ற நிலை. இதனால், வெளி யூர்களில் பணிபுரிபவர்கள் நவராத்திரியை கொண்டா டுவற்காக, சொந்த ஊருக்கு செல்ல மூட்டைமுடிச்சு களுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப். 30ம் தேதி) ஊருக்கு வந்தனர்.
தொடர்ந்து, 5 நாட்க ளுக்கு பின்னர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு திரும்பினர். இதனால், வேலூர் புதிய பஸ் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. குறிப்பாக, சென்னை, சேலம், பெங்களூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல் லும் பஸ்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இடம்பிடித்தனர்.
பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால், வேலூர் புதிய பஸ் நிலைய பகுதி நேற்று இரவு வரை பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்