search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்கள் ஓடின"

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
    திண்டுக்கல்:

    மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இன்றும் நாளையும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டது.

    மத்திய அரசு அலுவலகங்களான பி.எஸ்.என்.எல்., தபால்துறை, ரெயில்வே உள்ளிட்ட அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர். வங்கிகள் செயல்படவில்லை.

    திண்டுக்கல் நகரில் 50-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் அந்த ஆலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் திண்டுக்கல்லில் முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அவர்கள் தெரிவிக்கையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கு இலவச ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்படும் என்றார்.

    ஆனால் தற்போதைய தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இன்சூரன்ஸ் தொகை அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கான மானியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற உள்ளோம் என்றனர்.

    மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றபோதும் ஒருசில அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் மக்கள் பணி பாதிக்கப்பட்டது.

    சேலம், நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் ஓடின. போராட்டத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.#Bharatbandh
    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை வாழப்பாடி, வீரபாண்டி, இளம்பிள்ளை, மேச்சேரி, ஓமலூர், இரும்பாலை, ஆட்டையாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உள்ளூர் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

    அதுபோல் திருச்சி, தர்மபுரி, கரூர், நாமக்கல், மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மற்றபடி வேன், கால்டாக்சி வாகனங்கள் ஓடின.

    சூரமங்கலம் மீன் மார்க்கெட், உழவர் சந்தை, செவ்வாய்ப்பேட்டை, திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட் திறந்திருந்தன. வழக்கம்போல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச் சென்றனர். பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.

    நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் இயங்கின. நாமக்கல் நகரில் கறிக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மினிவேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கியது.

    மோகனூர், பரமத்திவேலூர், சேந்த மங்கலம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. வேலை நிறுத்த போராட்டத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #Bharatbandh

    அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின.
    ஈரோடு:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் (8-ந் தேதி), நாளையும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோரும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி. வங்கி போன்ற வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    இந்த வங்கிகளில் பணிபுரியும் 650 ஊழியர்களும் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் ஊழியர்கள் இல்லாமல் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பணபரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

    வேலை நிறுத்தம் பற்றி தெரியாத பலர் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இன்று மட்டும் ரூ. 300 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

    நாளையும் போராட்டம் நடப்பதால் மேலும் ரூ. 300 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 600 தபால் ஊழியர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தபால் பட்டு வாடா சேவைகள் முடங்கின. ரூ. 100 கோடிக்கு பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது.

    ஈரோட்டில் காந்திஜி ரோட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான தொலை தொடர்பு அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவையும் இன்று செயல்படவில்லை.

    இந்த அலுவலகங்கள் முன்பு அகில இந்திய வேலை நிறுத்தம் என்று மிகப்பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாயம் இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

    தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் மற்றும் தாளவாடி ஆகிய ஊர்களின் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதேபோல ஈரோடு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்திருந்தன.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால் காஞ்சீபுரம், திருவள்ளூரில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின.
    காஞ்சீபுரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. காஞ்சீபுரத்தில் இருந்து அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயங்கின. தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வழக்கம் போல் சென்றன.

    பிரதான காய்கறி சந்தைகளான ராஜாஜி மார்க்கெட் மற்றும் நேரு மார்க்கெட் வழக்கம் போல் திறந்து இருந்தது. அதிக அளவிலான ஷேர் ஆட்டோக்கள் ஓடின. அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்கின.

    செங்கல்பட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டன. ராஜாஜி சாலையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    திருவள்ளூரில் காலை முதலே பெரும்பாலான இடங்களில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    அதேபோல் அனைத்து பஸ்களும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பந்த்தால் மாவட்டத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இலலை. மாமல்லபுரத்தில் அரசு பேருந்துகள், வேன், ஆட்டோக்கள் இயங்கின. சுற்றுலா பயணிகள் பாதிக்காத வண்ணம் ஓட்டல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிற்ப பட்டறைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    பெரியபாளையம் பஸ் நிலையம் நோக்கி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மூர்த்தி, சத்தியவேல் தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திடீரென பெரியபாளையம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    டி.எஸ்.பி. சந்திரதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    காசிமேட்டு சிக்னல் அருகே மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். #PetrolPriceHike
    ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடின.
    ஈரோடு:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    மீதி 50 சதவீத கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் மருந்து கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. ஈரோடு கடை வீதிகளிலும் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் பழ வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்திருந்தனர்.

    அதே சமயம் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடியது. ஈரோடு பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடியது. பஸ்களில் அதிகளவில் கூட்டம் இல்லை. மேலும் ஈரோடு நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மாவட்டத்தில் முக்கிய ஊர்களான கோபி, சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் போன்ற அனைத்து ஊர்களிலும் 50 சதவீத கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.

    அதே சமயம் பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை வழக்கம் போல் ஓடியது.

    தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று ஒரு நாள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். மாவட்டம் முழுவதும் 1500 வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.



    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. பஸ் நிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    தருமபுரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் பஸ் நிலையம், சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை, சேலம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின்ரோடு, ஆகிய பகுதிகளில் வழக்கம்போல் ஓட்டல்கள், டீக்கடைகள், துணிக்கடைகள், பழக்கடைகள் உள்பட கடைகள் அடைக்கப்பட்டன.

    ஆனால் தருமபுரி ரூட் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் உள்ளே மட்டுமே மருந்து கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள் உள்பட ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

    மேலும் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் தருமபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு வழக்கம் போல் டவுன் பஸ்களும் இயங்கின. இதேபோன்று தருமபுரியில் இருந்து சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்களும் இயங்கின.

    பஸ் நிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், பொம்மிடி, காரிமங்கலம் உள்பட பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன. ஆட்டோகளும், பஸ்களும் வழக்கம்போல் இயங்கின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பஸ் நிலையங்களில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. ஆட்டோக்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் பூக்கடை, ஓட்டல்கள், மருந்து கடை, டீக்கடை உள்பட கடைகள் திறந்திருந்தன. மேலும் பஸ் நிலையத்தில் எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    இதுபோன்று ராயக்கோட்டை, ஓசூர், வேப்பன அள்ளி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்து இருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் மூடியிருந்தன.

    ×