search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் வழித்தடங்கள்"

    • கனிம வளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது
    • தரமான நெய்யை வழங்கி வருகிறோம். மக்கள் அதிகமாக வாங்குவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்கு வரத்து ஆணையர் மூலமாக ஒரு செயல்முறை ஆணையை பிறப்பித்துள்ளார். அந்த ஆணைப்படி இனி குமரி மாவட்டம் வழியாக 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி செல்லக்கூடாது. 28 டன் எடைக்கு மேல் கனிம வளங்களை கொண்டு செல்லக்கூடாது. மேலும் கனிம வளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக மட்டுமே கனிம வளங்களை கொண்டு செல்ல வேண்டும்.

    அதாவது ஆரல்வாய்மொ ழியில் இருந்து செண்பகரா மன்புதூர், துவரங்காடு வழியாக களியங்காடு வந்து வாகனங்கள் செல்ல வேண்டும். மேலும் காவல்கி ணறில் இருந்து தோவாளை, வெள்ளமடம், அப்டா மார்க்கெட், புத்தேரி, இறச்ச குளம் வழியாக களியங்காடு வந்து செல்லலாம். குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலைகள் இல்லை. குறுகிய சாலைகள் தான் உள்ளன.

    இதன் காரணமாக கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்து வருகிறோம்.

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 36 குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 7 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். இதுதொடர்பாக மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் குவாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிற 1-ந்தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். ஏற்கனவே கனிமவளம் கடத்தலை கண்காணிக்கும் வகையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    கோட்டார் போலீஸ் நிலையம் முன் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே லாரிகளை நிறுத்த வேறு இடம் பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் மேலும் கூறுகையில், தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கொள்மு தலை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். உற்பத்தியை பெருக்கும் வகையில் கறவை மாடுகள் வழங்க கடன் வசதி செய்து கொடுக்கப்பட் டுள்ளது. தற்போது நிர்வாக ரீதியாக நல்ல நிலையில் ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மின்சார செலவை குறைக்க வும் நடவடிக்கை மேற்கொண் டுள்ளோம். ஆவின் நெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. தரமான நெய்யை வழங்கி வருகிறோம். மக்கள் அதிகமாக வாங்குவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    எனவே உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செயல்பட்டு வரும் பால் கூட்டுறவு நிலையங்களை மேம்படுத்தவும், புதிதாக கூட்டுறவு நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட பாலுக்கு உடனடிகாக பாக்கி தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்துக்கு ஒருமுறை பாக்கி தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

    பேட்டியின்போது கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    • தேவர் ஜெயந்தி விழாவையொட்டி வெளி மாவட்ட வாகனங்கள் பசும்பொன் வந்து செல்லும் வழித்தடங்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
    • தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தேவர் ஜெயந்தியை யொட்டி ராமநாதபுரம் மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் பசும்பொன் வந்து செல்லும் வழித்தடங்கள், தடை செய்யப்பட்ட வழித் தடங்கள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மண்டல வாகனங்கள்: திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் நோக்கி வரக்கூடாது.

    வடக்கு மண்டல வாகனங்கள்: சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளுர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    மேற்கு மண்டல வாகனங்கள்: கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    தூத்துக்குடி, திருநெ ல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும் அல்லது தூத்துக்குடி, சூரங்குடி, சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வருமாறு:

    ராமேசுவரம்- பட்டினம்காத்தான்-இ.சி.ஆர்.பேராவூர் சந்திப்பு -பைபாஸ் ரோடு- அச்சுந்த ன்வயல்-சத்திரக்குடி-பரமக்குடி-கமுதக்குடி-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன்.

    தேவிபட்டினம்-கோப்பேரிமடம்-பேராவூர் சந்திப்பு-பைபாஸ் ரோடு- அச்சுந்தன்வயல்-சத்திரக்குடி-பரமக்குடி-பார்த்திபனூர்- அபிராமம்-பசும்பொன்.

    கீழக்கரை-பட்டி னம்காத்தான் இ.சி.ஆர்- பேராவூர் சந்திப்பு-பைபாஸ் ரோடு- அச்சுந்தன்வயல் -சத்திரக்குடி-பரமக்குடி-கமுதக்குடி-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன். சிக்கல்-சாயல்குடி-கோவிலாங்குளம்-கமுதி-பசும்பொன். கன்னி ராஜபுரம்-சாயல்குடி-கோவிலாங்குளம்-கமுதி-பசும்பொன்.

    செவல்பட்டி-சாயல்குடி-கோவிலாங்குளம்-கமுதி-பசும்பொன். கடலாடி-முதுகுளத்தூர்-பேரையூர்-கமுதி-பசும்பொன். காத்தாகுளம் மற்றும் எம்.சாலை-துளுக்கன்குறிச்சி, கடம்பன்குளம், மறவர் தெரு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி-பசும்பொன். பொசுக்குடி-வெங்கலக்குறிச்சி-வெண்ணீர் வாய்க்கால்-முதுகுளத்தூர்-பேரையூர்- கமுதி-பசும்பொன்.

    இளஞ்செம்பூர்-முனியன்கோவில் விலக்கு-முதுகுளத்தூர்-பேரையூர்-கமுதி-பசும்பொன். காக்கூர் மற்றும் புளியங்குடி-கீழப்பனையடியேந்தல்-வெண்ணீர் வாய்க்கால்-முதுகுளத்தூர்-பேரையூர்-கமுதி-பசும்பொன். மேலத்தூவல்-ஆனைசேரி-அபிராமம்-பசும்பொன். முஷ்டக்குறிச்சி-கமுதி-பசும்பொன்.

    க.விலக்கு, கிளா மரத்து ப்பட்டி-கமுதி-பசும்பொன். மண்டலமாணிக்கம்-கமுதி-பசும்பொன். பெருநாழி-கோவிலாங்குளம்-கமுதி-பசும்பொன். நயினார்கோவில்-எமனேஸ்வரம்-பரமக்குடி-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன். ஆர். எஸ். மங்களம்-சி. கே. மங்களம்-சருகனி-காளையார்கோவில்-சிவகங்கை-மானாமதுரை-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன்.

    திருப்பாலைக்குடி, தொண்டி மற்றும் எஸ். பி. பட்டினம்-திருவாடானை-சி.கே.மங்கலம்-சருகனி-காளையார்கோவில்-சிவகங்கை-மானாமதுரை-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன்.

    ராமநாதபுரம் மாவட்ட த்திற்குள் தடைசெய்யப்பட்ட வழித் தடங்கள் வருமாறு:-

    ஆ.புதூர் (விருதுநகர் மாவட்டம்)-மண்டலமாணிக்கம் முதுகுளத்தூர்-தேரிருவேலி (வழி : கிழக்கு தெரு, தேவர்புரம், காக்கூர் ஆர்ச்) கீழத்தூவல்-வெண்ணீர்வாய்க்கால் (கீழத்தூவல் வாகனங்களை தவிர) பார்த்திபனூர் சந்திப்பு (என்.ஹெச்)-அழகன்பச்சேரி மேலக்கொடுமலூர் விலக்கு-மேலக்கொடுமலூர் முதுகுளத்தூர்-அபிராமம் (வழி : நல்லூர், மணிப்புரம், ஆரபத்தி) வெங்கார் சந்திப்பு-வெங்கார்.

    பரமக்குடி 5 முனை சந்திப்பு-கீழத்தூவல் (வழி : பொன்னையாபுரம், பாம்பூர்) காந்தி நகர்-எமனேசுவரம் (இளையான்குடி சாலை) ஆர்.எஸ்.மங்கலம்-தேவிபட்டினம் (என்.எச்.210) தொண்டி-தேவிபட்டினம் (இ.சி.ஆர்.)

    இதம்பாடல்-உத்திரகோசமங்கை சந்திப்பு (வழி: உத்திரகோசமங்கை, நல்லாங்குடி)

    கீழக்கரை-சிக்கல் (வழி: புல்லந்தை, ஏர்வாடி, இதம்பாடல்) சிக்கல்-இளஞ்செம்பூர் (வழி : கீரந்தை) கடலாடி-மலட்டாறு சந்திப்பு. ராமநாதபுரம் நகர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×