search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுதடைந்த"

    • பேளூர் கரடிப்பட்டி கிராமங்கள். அரு கருகே அமைந்துள்ள இந்த இரு கிராமங்களிலும் ஏறக்கு றைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய, 1 கி.மீ தொலைவுள்ள செல்லியம்மன் கோவில் தார்சாலை வழியாக பேளூர் ஏத்தாப்பூர் சாலையை அடைகின்றனர்.

    வாழப்பாடி:

    பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி கிராமங்கள். அரு கருகே அமைந்துள்ள இந்த இரு கிராமங்களிலும் ஏறக்கு றைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய, 1 கி.மீ தொலைவுள்ள செல்லியம்மன் கோவில் தார்சாலை வழியாக பேளூர் ஏத்தாப்பூர் சாலையை அடைகின்றனர்.

    இதுமட்டுமின்றி, படையாச்சி யூர், கல்யாண கிரி, கல்லே ரிப்பட்டி கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் இச்சாலை வழியா கவே, வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சி பகுதிகளுக்கு பயணித்து வருகின்றனர்.

    சாலை பழுது

    5 கிராமங்களையும், வாழப் பாடி, ஏத்தாப்பூர் மற்றும் பேளூர் பேரூராட்சி கள் மட்டுமின்றி, கல்வ ராயன்மலை, அருநுாற்று மலை சாலைகளோடு இணைக்கும் பிரதான சாலையாக இருந்து வரும் கொட்டவாடி செல்லி யம்மன் கோவில் சாலை, பல ஆண்டுகளாக பரா மரிப்பின்றி குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது

    இந்த சாலையில் பய ணிக்க முடியாமல் 5 கிராம மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, பழுதடைந்து கிடக்கும் கொட்டவாடி செல்லி யம்மன் கோவில் தார்சாலையை புதுப்பிக்க பெத்தநாயக்கன்பா ளையம் ஊராட்சி ஒன்றிய அதி காரிகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேலூர் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் 18-வது வார்டில், 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • காவிரி ஆற்றின் நடுவே புகளூர் தடுப்பணை பணிகள் காரணமாக கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அப்பகுதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வாழவந்தியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு குற்றபுல னாய்வு துறை ஈரோடு உட்கட்ட டி.எஸ்.பி., சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 160 மூட்டையில் 9 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடத்தல்

    விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தேவேந்திரன் (52), பன்னீர்செல்வம் (60) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்திக் கொண்டு கடலூர் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, கடத்தப்பட்ட 9 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய தேவேந்தி ரன், பன்னீர்செல்வம் ஆகி யோரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில், முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ., தூரத்திற்கு இரு வழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
    • சாலையிலுள்ள குழியில் சிக்கி வாகனங்களும், வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம்-–சென்னை இடையே 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில், முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ., தூரத்திற்கு இரு வழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில் இருந்து, போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த வாழப்பாடி,– தம்மம்பட்டி சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளையும் இணைக்கும் வகையில், சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன பங்களிப்புடன் தன்னிறைவு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகரில் இருந்து புதுப்பாளையம் வரை, புறவழிச்சாலையின் இருபுறமும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது.

    தம்மம்பட்டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் இச்சாலை வழியாகவே சேலம்-–சென்னை தேசிய நெடுஞ்சா லையை அடைகின்றன. இதுமட்டுமின்றி, சிங்கிபுரத்தில் இயங்கும் சிமெண்ட் தொழிற்சாலைக்கு வரும் டேங்கர், பல்கர், டாரஸ், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும், வாழப்பாடி நகர்ப்புற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் அனைத்து ரக வானங்களும் இந்த இணைப்புச் சாலையிலேயே வந்து செல்கின்றன,

    இதனால் வாழப்பாடி மற்றும் இதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு இந்த இணைப்புச்சாலை பிரதானமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், புதுப்பாளையம் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து தெற்குபுறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கியதால், போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடக்கிறது.

    இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்து கிடக்கும் இணைப்புச்சாலையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொது மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து, புதுப்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது:- இந்த சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடக்கிறது. சாலையிலுள்ள குழியில் சிக்கி வாகனங்களும், வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த இணைப்புச் சாலையை சீரமைக்க அதிகாரிகள், காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×