search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மேலாண்மை குழு"

    • பள்ளியை சுற்றி உள்ள ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களை பள்ளியில் சேர்க்காமல் உள்ளவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்.
    • பள்ளியைச் சுற்றி மாற்றுத்திறன் உடைய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல்குடிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிகூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு பயிற்சியாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

    வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். பள்ளி தலைவர் வளர்மதி பயிற்சி பற்றி விளக்கினார். மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பள்ளியை சுற்றி உள்ள ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களை பள்ளியில் சேர்க்காமல் உள்ளவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது,

    பள்ளியைச் சுற்றி மாற்றுத்திறன் உடைய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தலைமை ஆசிரியர் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்து சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்,

    பள்ளியின் செயல்பாடுகளை கண்காணித்து மற்றும் மாணவருடைய கற்றல் திறனை கவனித்து அதற்கேற்ற கற்றல் சூழல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது.

    • ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் ரத்னா முன்னிலை வைத்தார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா வரவேற்றார்.

    ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதனை போக்குவரத்து அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.நஞ்சப்பா பள்ளி சாலை முன்பு நிறுத்தும் அதிகப்படியான வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல், பள்ளியில் இருந்து குறைந்தது 10 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவிகளை கண்டறிந்து, இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராமல் இருக்கும் மாணவர்கள் அடையாளம் கண்டு அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர் கல்லூரியில் சேர உரிய ஆலோசனை மற்றும் உதவிகளை செய்தல், நீட், சட்டப்படிப்பு, சி.ஏ., போன்ற உயர் படிப்புகளுக்கு உரிய ஆசிரியர்களை நியமித்து மாணவிகளுக்கு தக்க பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்தும் மாணவிகளுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டன. மேலாண்மைக்குழு உறுப்பினர் 17 பேர் பங்கேற்றனர்.

    • பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
    • 3 முதல் 5 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.

    உடுமலை :

    அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு அமைத்து, அவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை கல்வித்துறை வழங்கியுள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப்பள்ளிகளைச்சேர்ந்த பள்ளி மேலாண்மை குழுவினருக்கு சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் சுமதி பயிற்சியளித்தார்.

    பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், பள்ளி வளர்ச்சிக்கான துணைக்குழுக்கள் அமைத்தல், மாணவர் சேர்க்கை மற்றும் இடை நிற்றலை தவிர்த்தல், குழு கற்றல் மேம்பாட்டு குழு, மேலாண்மை குழு, கட்டமைப்பு குழு உள்ளிட்ட குழுக்களில், 3 முதல் 5 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    ×