search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள் மாயம்"

    • உறவினர்கள் டியூசன் மையத்திற்கு சென்று கேட்டனர். அப்போது அவர்கள் வரவில்லை என தெரிவித்தனர்.
    • சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் நாரலப்பள்ளி கூட்டு ரோடு அருகில் கிருஷ்ணகிரிக்கு செல்ல கூடிய அரசு பஸ்சில் ஏறி சென்றது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள பி.சி.புதூரை சேர்ந்தவர் திம்மராஜ். இவரது மகள் பசவராஜ் (வயது 13).

    இவர் தாசினாவூர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பள்ளியில் தங்காடி குப்பத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் ஹரிபிரசாத் (13), குமார் என்பவரின் மகன் ஹரீஷ் (13) ஆகியோர் 9-ம் வகுப்பு உடன் படித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் மாலை அவர்கள் 3 பேரும் 6 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள டியூசன் சென்டருக்கு படிக்க செல்வதாக கூறி சென்றனர்.

    ஆனால் அவர்கள் 3 பேரும் டியூசன் செல்லவில்லை. இந்த நிலையில் இரவு வீடு திரும்பாததை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் டியூசன் மையத்திற்கு சென்று கேட்டனர். அப்போது அவர்கள் வரவில்லை என தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து 3 மாணவர்களின் பெற்றோரும் மகராஜகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார்.

    மேலும் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் நாரலப்பள்ளி கூட்டு ரோடு அருகில் கிருஷ்ணகிரிக்கு செல்ல கூடிய அரசு பஸ்சில் ஏறி சென்றது தெரிய வந்தது.

    மாணவர்கள் 3 பேரையும் மகராஜகடை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×