search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி தலைமை ஆசிரியர்கள்"

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அவரவர் பயின்ற பள்ளிகளில் வழங்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அவ்வாறு பெறப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் பள்ளி மாற்றுச்சான்றிதழும் வழங்கப்பட இருந்ததால் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தங்கள் பெற்றோருடன் நேற்று வந்திருந்தனர்.

    பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்றிதழ்களை அங்கு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜூ வழங்கினார்.

    இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
    ×