search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்த"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பகுதிகளில் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, பொன்மலர்பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், சோழசிராமணி, பெருங்குறிச்சி, மணியனூர், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்தகாற்று, பலத்த இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை வேகமாக செய்ய ஆரம்பித்து மிக பலத்த மழை இரவு சுமார் 12 மணி வரை பெய்து கொண்டிருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணிய னூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளையம், சோழ சிராமணி, வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பா ளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ. குன்னத்தூர், வடகரை யாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்தகாற்று, பலத்த இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மழை வேகமாக செய்ய ஆரம்பித்து மிக பலத்த மழை இரவு சுமார் 12 மணி வரை பெய்து கொண்டிருந்தது.

    இதன் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    அதேபோல் சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள் , சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் பலத்த மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர்.

    பலத்த மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது பெய்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது.
    • கருமந்துறை தலைக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் முருகன் (வயது 14) நேற்று மதியம் உணவு அருந்தி விட்டு வகுப்பறைக்கு சென்ற போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி யில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    தவறி விழுந்த மாணவர்

    இந்த பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 77 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    இதில் 9-ம் வகுப்பு படிக்கும் சேலம் மாவட்டம் கருமந்துறை தலைக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் முருகன் (வயது 14) நேற்று மதியம் உணவு அருந்தி விட்டு வகுப்பறைக்கு சென்ற போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

    தொடர் சிகிச்சை

    இதில் பலத்த காயம் அடைந்த மாணவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தில் காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    • இதேபோல் இன்று காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கனமழை காரணமாக பெரும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சத்தியமங்கலம்- கடம்பூர் ஆசனூர் போன்ற மலை கிராமங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்கு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள் குட்டைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு லேசாக சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    வழக்கம்போல் ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது. மேலும் சேறும் சகதியுமாக இருந்ததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் இன்று காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கனமழை காரணமாக பெரும் அவதி அடைந்தனர். பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தை களை குடை பிடித்தப்படிய பள்ளிக்கு அழைத்து சென்றனர். சிலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். கோபி -குண்டேரி பள்ளம் தாளவாடி கொடுமுடி போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    • நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. அதிகபட்சமாக ராசிபுரத்தில் 129 மிமீ மழைபதிவாகின. மாவட்டத்தில் பதிவான மழை விபரம் :-புதுச்சத்திரம் 94 மிமீ, கலெக்டர் அலுவலகம் , பரமதேதி வேலூர் 86 மிமீ, சேந்தமங்கலம் 75 மிமீ, , கொல்லிமலை செம்மேடு 73 மிமீ, மோகனூர் 71 மிமீ, திருச்செங்கோடு 70 மிமீ, மங்கலபுரம் 45 மிமீ, குமாரபாளையம் 15.60 மிமீ மழை பெய்தன.

    • நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. அதிகபட்சமாக ராசிபுரத்தில் 129 மிமீ மழைபதிவாகின. மாவட்டத்தில் பதிவான மழை விபரம் :-புதுச்சத்திரம் 94 மிமீ, கலெக்டர் அலுவலகம் , பரமதேதி வேலூர் 86 மிமீ, சேந்தமங்கலம் 75 மிமீ, , கொல்லிமலை செம்மேடு 73 மிமீ, மோகனூர் 71 மிமீ, திருச்செங்கோடு 70 மிமீ, மங்கலபுரம் 45 மிமீ, குமாரபாளையம் 15.60 மிமீ மழை பெய்தன.

    ×