search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவைக்"

    • கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கோழிப்ப ண்ணையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர்.
    • நாமக்கல் மற்றும்சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில், கால்நடை பராமரிப்பு துறை யினரின் ஆலோசனைப்படி வெளிநபர்கள் கோழிப் பண்ணைகளுக்குள் நுழை வது தடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கோழிப்ப ண்ணையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர். கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல்

    மாவட்டத்தில் பண்ணையா ளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கி யுள்ளனர்.

    இதன்படி நாமக்கல் மற்றும்சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில், கால்நடை பராமரிப்பு துறை யினரின் ஆலோசனைப்படி வெளிநபர்கள் கோழிப் பண்ணைகளுக்குள் நுழை வது தடுக்கப்பட்டுள்ளது. பண்ணைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் கொண்ட 45 அதிவிரைவு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை களை எவ்வாறு பின்பற்றி வருகிறார்கள் என இக்குழு கண்காணிப்பில் ஈடுபட, நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துணை இயக்குனர் பாஸ்க ரன் உத்தரவிட்டு உள்ளார்.

    இதனிடையே பல்ல டத்தில் நேற்று முன்தினம் ரூ.119-ஆக இருந்த கறிக்கோழி விலை, 13 ரூபாய் குறைந்து நேற்று ரூ.106- ஆக இருந்தது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ள நிலையில் மேலும் இந்த விலை குறையும் என கூறப்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் பீதிஅடைந்துள்ளனர் .

    முட்டை பண்ணை கொள்முதல்விலை 5 ரூபாயாக நீடிக்கிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்ட நிலையிலும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டைகள் வழக்கம் போல அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ×