search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்னிச்சர்"

    • ராணுவ அதிகாரி என்கிற பெயரில் “பழைய பர்னிச்சர்” பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்று அறிவிப்பு வந்தது.
    • திலீப்குமார் அளித்த புகாரின் பேரில் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வடபழனி, அழகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது முகநூல் பக்கத்தில் ராணுவ அதிகாரி என்கிற பெயரில் "பழைய பர்னிச்சர்" பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்று அறிவிப்பு வந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணை திலீப்குமார் தொடர்பு கொண்டு பொருட்களை வாங்கி கொள்வதாக கூறினார்.

    அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ரூ.30ஆயிரம் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்பினால் உடனடியாக அனைத்து பர்னிச்சர் பொருட்களையும் வீட்டிற்கு டெலிவரி செய்வதாக தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய திலீப்குமார் உடனடியாக ரூ.30ஆயிரத்தை அனுப்பினார். பின்னர் அந்த நபர் திலீப்குமாரின் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. அவர் மோசடியில் ஈடுபட்டு இருப்பதை அறிந்து திலீப்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் பர்னிச்சர் கடையில் புகுந்து ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் செல்வவராஜ் (வயது 45). இவர் அேத பகுதியில் உள்ள தந்திமாடத்தெரு, நேருஜி வீதி ஆகிய பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

    தந்திமாடத்தெருவில் உள்ள பர்னிச்சர் கடையில் ராமலட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இந்த கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் ரூ. 45 ஆயிரத்தை வைத்து விட்டு செல்வராஜ் வெளியே சென்று விட்டார்.

    இந்த நிலையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர் உடனே செல்வராஜூக்கு தகவல் தெரிவித்தார்.

    விரைந்து வந்த அவர் கடையில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பட்டப்பகலில் மர்ம நபர் கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

    இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×