search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்கூர் ஒன்றியத்திற்கு படேதாள ஏரியில் இருந்து தண்ணீர்"

    • பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.
    • பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் 269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது படேதாள ஏரிக்கு மார்க்கண்டேயன் நதியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில், 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கடந்த, 2017-ல் ஆந்திரா மாநில எல்லை மற்றும் மாவட்டம் முழுவதும் பெய்த கன மழையால், மார்க்கண்டேயன் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், 12 ஆண்டுகளுக்கு பிறகு படேதலாவ் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. மீண்டும், 2019-ல் பெய்த கன மழையால் ஏரி நிரம்பியது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி பாப்பாரப்பட்டி ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், படேதாள ஏரியில் இருந்து பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலில் 2-வது முறையாக பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.

    இது குறித்து மதியழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    வாய்க்காலில் தண்ணீர் செல்லாமல் ஏரிக்கு திரும்பி வந்ததாக வந்த புகாரையடுத்து, வாய்க்கால் சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த வாய்க்கால் மூலம் 3 ஏரிகள் மட்டுமே நிரம்பின. பின்னர் மழையின்றி ஏரி வறண்டது. தற்போது ஏரி நிரம்பிய பிறகும் மார்க்கண்டேயன் நதியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடைமடை வரை தண்ணீரைக் கொண்டு சென்று பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×