search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி வியாபாரி தற்கொலை"

    தனது வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்த அவர் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது50). பருத்தி வியாபாரம் செய்து வந்தார். நேற்று தனது வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சின்னையா உயிரிழந்தார். இது குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.
    • தனது வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பழனி ரோடு நாட்டாண்மை கார தெருவை சேர்ந்தவர் அங்குச்சாமி (வயது 57). இவர் பருத்தி வியாபாரம் செய்து வந்தார்.

    தனலட்சுமி என்ற மனைவியும், ஈஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அங்குச்சாமி இன்று தனது வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×