search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரியங்கா காந்தி"

    பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய நடிகர் என இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
    லக்னோ:

    பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைந்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மிர்சாப்பூரில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். சாலையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி பேசுகையில், மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய நடிகரை (மோடியை) நீங்கள் பிரதமராக தேர்வு செய்திருக்கிறீர்கள். 

    அவருக்கு பதிலாக நீங்கள் அமிதாப்பச்சனைக்கூட தேர்வு செய்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கக்கூடும். யாரும் உங்களுக்கு எதுவும் செய்து விடப்போவதில்லை என்பது வேறு வி‌ஷயம் என்றார். 

    பிரதமர் மோடியை விமர்சனம் செய்த கையோடு அமிதாப்பச்சனையும் பிரியங்கா காந்தி விமர்சனத்திற்கு இழுத்ததற்கு காரணம் உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன், பிரியங்காவின் தந்தை ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர். அவரை அரசியலுக்கு கொண்டு வந்த ராஜீவ் காந்தி 1983 தேர்தலில் அலகாபாத் பாராளுமன்ற தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்தவர். 

    கடந்த 1986-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசியல் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. போபர்ஸ் ஊழலில் அமிதாப் பெயர் அடிபட்டபோது அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அந்த ஊழலில் அவர் குற்றம் செய்யவில்லை என நிரூபணமானது. ஆனாலும் அமிதாப்பச்சன் அரசியலைப் பற்றி திரும்ப நினைத்துப்பார்க்கவில்லை. அதனை குறிப்பிட்டு பிரியங்கா காந்தி பேசியுள்ளார். 
    ×