search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரவும்"

    • சீரமைப்பு பணி செய்ய பொது மக்கள் கோரிக்கை
    • கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உருவாகி உள்ளன.

    கன்னியாகுமரி:

    தக்கலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள ஆத்திவிளை ஊராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன.

    திங்கள் நகர் ரவுண்டானா அருகே சேவியர் தெருவில் இருந்து தபால் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் ஓடை அடைபட்ட நிலையில் இருந்து வந்ததால் சீரமைப்பு பணிகள் நடந்தன. ஆனால் இரணியல் போலீஸ் நிலைய நுழைவு வாயிலில் வழியில் ஓடை அடைபட்ட நிலையில் உள்ள தால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உருவாகி உள்ளன.

    இரணியல் போலீஸ் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, தபால் அலுவலகம், தனியார் மருத்துவமனை கள், ஆட்டோ நிறுத்தம், தேநீர் கடைகள், ஓட்டல்கள் உள்ள இப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ளது. இது டெங்கு காய்ச்சல் அபாயத்தை ஏற்படுத்துவதாக பொது மக்கள் அஞ்சுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குமாரபாளையத்தில் புதிதாக பரவி வரும் கால்நடை நோயால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு ஏற்பட்டு, அது அனைத்து கால்நடைகளுக்கும் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார் ஆகியோர் நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இது சாதாரண வைரஸ் நோய், இதற்காக அச்சப்பட வேண்டியதில்லை என்று கூறினர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கால்நடை டாக்டர்கள் அச்சப்படா தீர்கள் என்றாலும், கால்நடைகளின் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து விவசாயிகளும் மருத்துவமனைக்கு தங்கள் கால்நடைகளை அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்வதென்பது சாத்தியமில்லை.

    ஆகவே ஒவ்வொரு கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு தடுப்பூசி போட்டால், விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதோடு பல கால்நடைகளை நோய் பாதிப்பு, நோய் பரவலில் இருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×