search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பம்புசெட்"

    • பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
    • பம்புசெட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வருவதால் மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கேசவன்பாளையம், களுவன்திட்டு, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 13 -வது வார்டு, ஸ்டேட் வங்கி அருகில் தேர் வடக்கு வீதி, 8-வது வார்டு தடாளம் மேற்கு , வசந்த் நகர், 2- வது வார்டு இரணியன் நகர் ஆகிய இடங்களுக்கு கலெக்டர் லலிதா கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கேசவன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் மழை நீரை பம்பு செட் வைத்து வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிட்டார். அங்குள்ள பொது மக்களிடம் மழை அதிகமாக இருக்கும் என்று வானிலை அறிக்கை கூறியுள்ளதால் பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட களுவன்திட்டு பகுதியில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.

    குறிப்பாக பொது மக்கள் தங்கியிருக்கும் வீடுகளின் அருகில் மழை நீர் தேங்கியிருக்கும் பட்சத்தில் பம்பு செட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

    மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் பம்பு செட்வைத்து மழை நீரை வெளியேற்ற சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இவ்வாய்வின் போது , சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, சீர்காழி நகர் மன்றத்த லைவர்துர்கா பரமே ஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சித்தலைவர் சுகுணாசங்கரி, சீர்காழி நகராட்சி ஆணையர்வா சுதேவன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர்கமலக்கண்ணன், வட்டாட்சியர்கள் செந்தில்குமார்,புனிதா,வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரதுறை , வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் பம்புசெட் வாங்க விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடி நீர்பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (3 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) புதிய மின்மோட்டார் பம்புசெட்டு மானியத்தில் வாங்குவதற்கு தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 28 பேருக்கு தலாரூ.10 ஆயிரம் வீதம் மானியம் வழங்க ரூ.2.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஏற்கனவே மின்இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற டீசல் பம்புசெட்டு அல்லது பழைய மின்மோட்டார்களை மாற்ற விரும்புபவர்கள் மற்றும் புதிய ஆழ்துளைக்கிணறு, திறந்தவெளி கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள் 10 குதிரைத்திறன் வரையிலான புதிய மின்மோட்டார் மாற்றிக்கொள்ள பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரை படம், சிறு, குறு விவசாயி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் மின்இணைப்பு அட்டை ஆகிய விவரங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

    வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மின்மோட்டார் வாங்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்டார விவசாயிகள் சிவகங்கை- தொண்டி ரோட்டில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர்(வே.பொ), சிவகங்கை அலுவலகத்திலும், 8220253460 என்ற கைபேசி எண்ணிற்கும், தேவகோட்டை, சிங்கம்புணரி, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), காரைக்குடி அலுவலகத்திலும், 9489440970 என்ற கைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×