search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றிக் காய்ச்சல்"

    • கலெக்டர் தகவல்
    • வாணியம்பாடியில் வியாபாரி பலியானார்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார் (57). இவர் பால் விற்பனை, மாவு அரவை மில் மற்றும் மளிகை கடை நடத்தி வந்தார்.

    இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நிலை அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 21 -ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மேலும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.

    நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் வீடு அமைந்துள்ள பகுதியில் நகராட்சி மூலம் முக கவசங்கள் வழங்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    பின்னர் உயிரிழந்தவரின் சடலம் சென்னையில் இருந்து வாணியம்பாடிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு உறவினர்கள் யாரையும் நெருங்க விடாமல் அவருடைய பிணத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அஞ்சலிக்காக 5 நிமிடம் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் நகராட்சி நிர்வாகம், சுகாதாரதுறை மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள மயானத்தில் கொரோனா கால கட்டத்தில் இறந்தவரை அடக்கம் செய்தது போன்று 15 அடி ஆழம் குழி தோண்டப்பட்டு பிளீச்சிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை குழியில் போட்டு நகராட்சி பணியாளர்கள் கவச உடை அணிந்து மிகவும் பாதுகாப்பாக சடலத்தை அடக்கம் செய்தனர்.

    பன்றி காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களால் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

    இது குறித்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    உயிரிழந்த நபர் எங்கெங்கு பயணம் செய்தார் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    அதேபோல் இந்த நோய்க்கான தடுப்பு மாத்திரைகள் போதுமான அளவு உள்ளது. அது பொதுமக்களுக்கு தேவைப்பட்டால் அளிக்க ப்படும். போதிய அளவு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பன்றி காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×