search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்னீர் குருமா"

    தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
    கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்துமல்லி இலை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கேற்ப

    அரைக்க :

    தேங்காய்த் துருவல் - கால் கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 3
    கொத்துமல்லி இலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    சோம்பு - 1 தேக்கரண்டி
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 3
    அன்னாசிப்பூ - 1
    பட்டை - சிறிய துண்டு
    முந்திரி பருப்பு - 10



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

    ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கைவிடாமல் வதக்கவும். தேங்காய் விழுது லேசாக வதங்கியதும் சிறிது நேரம் மூடிப் போட்டு வதக்கவும்.

    வாணலியின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது 1 கிண்ணம் தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும்.

    பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    குருமா நன்கு கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பின் கரம் மசாலா தூள் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.

    கடைசியாக சிறிது கஸ்தூரி மேத்தி (காய்ந்த வெங்காயத்தாள்) சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.

    கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்

    சூப்பரான பன்னீர் குருமா ரெடி.

    ×