search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ரிநாத் கோவில்"

    • உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது.
    • கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி நுழைவு வாயில் முழுவதும் பல டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவில் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை திறந்து இருக்கும். இன்று காலை 7.10 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்காக கடந்த சனிக்கிழமை பக்தர்கள் யாத்திரை தொடங்கியது. கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி நுழைவு வாயில் முழுவதும் பல டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    • பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர்.
    • சாமியார் ஒருவர் கடும் பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஈடுபட்டார்.

    டோராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர்.

    தற்போது இங்கு கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. கோவிலுக்கு செல்வதற்கான சாலைகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    ஆனாலும் அங்குள்ள சாமியார் ஒருவர் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஈடுபட்டார். இது அங்கு சென்ற பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதனை யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ×