search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதுக்கி வைத்து இருந்த"

    • சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளிசெட்டி பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் ஒரு வாலிபர் புகையிலை பொரு ட்களை பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காளிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வீட்டில் வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஹான்ஸ், போதை பாக்கு உள்பட 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×