search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியை"

    • இரணியல் இரட்டை பிரிவு கால்வாயினை தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வல்சன் போஸ், பணி ஆய்வாளர் மகேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் அமைந்துள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணியினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரணியல் இரட்டை பிரிவு கால்வாயினை தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கோதையாறு பாசன திட்டத்தின்கீழ் அமைந்துள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரு கிறது. ரூ.4.80 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டர் நீளத்தில் அனந்தன்குளம் கால்வாய்க்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை'அ' கிராமம் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும், ரூ.8.50 லட்சம் மதிப்பில் 7 கிலோ மீட்டர் நீளத்தில் ஆசாரி பள்ளம் கால்வாய்க்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் வட்டம், வேம்பனூர் கிழக்கு, நீண்டகரை அ, மற்றும் கல்குளம் வட்டம் ஆளுர் 'ஆ' கிராமம் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    ரூ.11.51 லட்சம் மதிப்பில் 5.60 கிலோ மீட்டர் நீளத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை அ, வடிவீஸ்வரம் கிழக்கு கிராமம் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளையும், ரூ.5 லட்சம் மதிப்பில் 3.60 கிலோ மீட்டர் நீளத்தில் தெங்கம்புதூர் கால்வாய்க்குட்பட்ட மதுசூதனபுரம் கிராமம் ஆகிய இடங்களில் நடை பெற்று வரும் வருடாந்திர பராமரிப்பு பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் கால்வாய்களை முறையாக தூர்வாருவதால் கால்வாயின் நீர்ப்போக்கு கொள்ளளவு அதிகரிக்கும். கால்வாயில் வரும் தண்ணீர் இழப்பு ஏற்படாமல் கடை வரம்பு பகுதிகளில் உள்ள பாசன பகுதிகளுக்கு வெள் ளப்பெருக்கு காலங்களில், சென்றடையும் கால்வாய் களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல் லாமல் பாதுகாக்க இயலும். மேலும் இக்கால்வாய்களின் வாயிலாக 2246.61 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வல்சன் போஸ், பணி ஆய்வாளர் மகேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • கனிமொழி எம்.பி. பேச்சு
    • ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கலைஞர் பிறந்தநாள் நிகழ்வுகளை ஓராண்டுக்கு தி.மு.க. மற்றும் அரசு சார்பில் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டி ருக்கிறார். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசும்போது வரும் நாடாளு மன்ற தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளார். யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தேர்தல் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவதுதான் கலைஞருக்கு நாம் தரும் நூற்றாண்டு பரிசாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    சிலர் இந்த பகுதி எல்லாம் வெற்றி பெற்று விடலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அக்கனவு பலிக்காது. இங்கு மீண்டும் தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை தவிர யாரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு ஆய்வு நடத்தி இருக்கி றோம். தி.மு.க. மகளிர் அணியில் இன்னும் அதிகமான பெண்களை இணைக்க வேண்டும். அவர்களை செயல்பட கூடியவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு தர வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தி.மு.க.வில் அரசியலை தொடங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா வழியில் வந்த தி.மு.க. அரசு தமிழ கத்தின் சுயமரியாதையை என்றும் காக்கும். தமிழகத்தின் உரிமை மற்றும் அதன் அடையாளத்தை பாதுகாப்பதில் தி.மு.க. அரசுக்கு நிகர் யாருமில்லை என்பது மக்களுக்கு தெரி யும். தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்ல கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் மூலம் வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது. எதிர் அணியினர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பு கிறார்கள். அதை முறிய டிக்கும் வகையில் நாம் நேரடியாக மக்களை சந்தித்து உண்மைகளை எடுத்துக்கூற வேண்டும். கட்சிப்பிரதிநிதிகள், தொண்டர்கள் தேர்த லுக்கான பணிகளை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதி யில் உள்ள கலைஞர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநக ராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் ஜோசப் ஸ்டாலின், நசரேத் பசலி யான், தில்லை செல்வம், பாபு வினி பிரட், தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திர குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் வந்த கனிமொழி எம்.பி.க்கு நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண்கள் மற்றும் ஏழை களுக்கு தி.மு.க.பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழ்நாடு வளர்ச்சி பணியில் ஒரு முன் உதாரணமாக விளங்கி வரு கிறது. தமிழக கவர்னர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வரு கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர் கருத்துக் களை தெரிவித்து வருகிறார். இதனை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்தும் கவர்னர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ இல்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×