search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நேரம்"

    • அஞ்சல் ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
    • பல போராட்டங்களை நடத்தி ஊழியர்களின் கோரிக்கைகளை சங்கம் நிறைவேற்றி தந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை கோட்ட மாநாடு நடைபெற்றது. கோட்ட தலைவர் அம்பிகா பதி தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலாளர் மகாதேவய்யா மாநாட்டில் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    மத்திய அரசால் அங்கீக ரிக்கப்பட்ட ஒரே சங்கமாக அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதும் 2.5 லட்சம் ஊழியர்கள் உறுப்பி னர்களாக உள்ளனர். பல போராட்டங்களை நடத்தி ஊழியர்களின் கோரிக்கை களை சங்கம் நிறைவேற்றி தந்துள்ளது.

    4 மணி நேரம் வேலை என கூறிறி கிராமிய அஞ்சல் ஊழியர்களை பணிக்கு நியமித்த அஞ்சல் நிர்வாகம் தற்போது அவர்களுக்கு 10 மணியிலிருந்து 12 மணி நேரம் வரை பணி நேரத்தை அதிகரித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்களி்ன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.

    7-வது ஊதியக் குழுவில் கமலேஷ் சந்திரா கமிட்டி மத்திய அரசுக்கு செய்த பரிந்துரை அறிக்கையில் கிராமிய அஞ்சல் ஊழியர்க ளுக்கு நியாயமாக வழங்கப் பட வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த கமிட்டி பரிந்துரையை கிடப்பில் போட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநாட்டில் மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் இஸ்மாயில், முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ, மதுரை மண்டலச் செய லாளர் ராமசாமி, சிவகங்கை கோட்டச் செயலாளர் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை கோட்ட புதிய நிர்வாகிகளாக செயலர் செல்வன், தலைவர் அம்பிகாபதி, பொருளாளர் ரத்தினபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

    • புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே 15 ஏக்கர் அரசு இடம் உள்ளது.
    • புதுச்சேரி அரசு 12 ஆண்டுகளுக்கு பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே, 5 ஏக்கர் இடத்தில், புதிய சட்டசபை கட்டிடம் விரைவில் கட்டப்படும் எனசபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார். காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே 15 ஏக்கர் அரசு இடம் உள்ளது. அதில் 5 ஏக்கர் இடத்தில் ரூ.450 கோடி செலவில், புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்படும். இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒரு சில தினங்களில் இறுதி செய்யப்பட்டு பணி தொடங்க உள்ளது. புதுச்சேரி அரசு 12 ஆண்டுகளுக்கு பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இதனை அனைத்துதரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். அதேபோல், கவர்னர், முதல் அமைச்சர் ஒருங்கிணைந்து முடிவெடுத்து பெண்களுக்கு 2 மணி நேரம் பணி நேரம் குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
    • மதியம் 2 மணிக்கு பணி முடிந்த பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.

    உடுமலை :

    தமிழகம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில், கால்நடை மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.இம்மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது.சிறு, குறு விவசாயிகள், தங்கள் நிலங்களில் விவசாயப்பணிகளை மேற்கொள்வதுடன் அருகிலுள்ள நிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்களாகவும் உள்ளனர். மதியம் 2 மணிக்கு பணி முடிந்து திரும்பிய பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என மாற்றியமைத்தால், மருத்துவமனைகளின் செயல்பாடு பயனற்றதாகி விடும்.

    ஆய்வுப்பணிகள், அவசர சிகிச்சை, விரிவாக்கம், திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க, டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் செல்வது வழக்கம்.கால்நடை மருத்துவமனைகளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, யாராவது ஒருவர் பணியில் இருந்தாலும், முதலுதவி போன்ற உதவிகளை செய்ய முடியும்.மதியம் 2 மணியுடன் வேலை நேரம் முடிந்தால் மறுநாள் காலை 8மணி வரை, அதாவது, 18 மணி நேர இடைவெளியில் எவ்வித கால்நடை மருத்துவ சேவையும் கிடைக்காது.கலப்பின கால்நடைகள் அதிகமாக உள்ளதால் நோய்த்தாக்குதல், அடிக்கடி ஏற்பட்டு பரவி வருகிறது.

    இவ்வகை கால்நடைகளை கட்டி வளர்க்கும் நிலையில், மருத்துவ ஊழியர்களை, விளைநிலங்களுக்கே அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. அவசர தேவைகளுக்கு தற்போதே தனியார் டாக்டர்களை நாடும் நிலை உள்ளது.எனவே கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது. அவசர கதியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்ட வாரியாக நடமாடும் மருத்துவ வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர். மேலும் பணி நேர மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

    ×