search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்னாவீஸ்"

    மகாராஷ்ரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #DevendraFadnavis #Maoist
    மும்பை:

    சமீபத்தில் பிரதமர் மோடியை மாவோயிஸ்டுகள் கொலை செய்ய திட்டமிட்டுருப்பதாக வந்த தகவலை அடுத்து, நாடு முழுவதும், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுமார் 40 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது, அவர்கள் மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பழி வாங்கும் விதமாக, மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    2 இ-மெயில்களில் வந்த கொலை மிரட்டலை அடுத்து, முதல்மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இ-மெயிலில், சிலரை கொலை செய்வதன் மூலம் எங்கள் சிந்தனையை அழிக்க முடியாது. கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதற்கு கணக்கு தீர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இரண்டு இ-மெயில்களின் நகலை காவல்துறையிடம் அளித்துள்ளதாகவும், காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். #DevendraFadnavis #Maoist
    ×