search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டிமன்றம்"

    • ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா?
    • முன்னதாக எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா ஆறாவது நாள் ஆன்மிக பட்டிமன்றம் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா? என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர், டிவி புகழ் அகடவிகட நடுவர் கலைமாமணி நாகை நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலே என்ற தலைப்பில் அன்னலெட்சுமி, பிரபாகரன், வர்ணனி ஆகியோரும், ஆன்மீகம் பெரிதும் பெருகியது புறத்திலே என்ற தலைப்பில் டிவி புகழ் பழனி, தமிழாசிரியர் சாகுல் ஹமீது, ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார்.

    எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் முனைவர் துரை ராயப்பன், ஆலோசகர் மருத்துவர் பாண்டியன், சர்வாலய உழவாரப்பணி குழுவை சேர்ந்த பாபு என்ற குமரவேல், முருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் ஊழியர் ராஜ்மோகன், நிசாந்த், அண்ணா துரை, மணி, மணிவண்ணன், குருக்கள் ஹரிஹரன், வினோத், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

    வருகிற அக் 24 ஆம் தேதி வரை அணைத்து நிகழ்ச்சிகளையும் சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி விழாக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

    • தினசரி பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம், சொற்பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.
    • விழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டமாக பிரிந்து 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை அனுசரிக்கும் விதமாக "கடலூர் 30" என்ற தலைப்பில் "நெய்தல் புத்தக திருவிழா," 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை கடலூர் சில்வர் பீச்சில் நடைபெறுகிறது. இதற்காக 45 புத்தக அரங்கு களும், அரசின் பல்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட அரங்கு களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு திட்டங்கள் குறித்த கொள்கை விளக்க பொருட் காட்சியும் அமைக் கப்பட்டுள்ளது. மேலும் மாணவ- மாணவிகளி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தினசரி பிரபல பேச்சாளர்க ளின் பட்டிமன்றம், சொற் பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் தினசரி 2,500 முதல் 3 ஆயிரம் மாணவர்கள் வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 28 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாண வர்களின் வசதிக்காக 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மூலம் பள்ளி களுக்கே சென்று மாண வர்களை ஏற்றிவரவும், விழா முடிந்ததும் மீண்டும் அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும். 

    மேலும் இங்கு வரும் குழந்தைகளுக்காக அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகள், தமிழர் கலாசாரத்தை பறை சாற்றும் வகையி லான கலைநிகழ்ச்சிகளும் நடை பெறும். புத்தக திருவிழா வுக்கு வருபவர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து கொடுக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடலுக்கு செல்லாத வகை யில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்கள். புத்தக திருவிழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படா மல் தடுக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உடனிருந்தார்.

    • யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .
    • முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

      வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள் இணைந்து மாணவிகளின் பேச்சுத் திறனை அதிகரிப்பதற்காகவும், மேலும் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகவும் முக்கியம் பணப்பரிவர்த்தனையா, யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .

    இதில் பணப்பரிவர்த்தனை சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் பேசினார்கள். இந்நிகழ்வில் வணிகவியல் துறை தலைவர் யமுனா நடுவராக இருந்து மாணவிகளின் வாதங்களிலுள்ள சிறப்புகளை தொகுப்பித்து இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும் நாட்டிற்கும் மிக முக்கியம் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே என்று தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்விற்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும் ,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

    தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினார்கள். கல்லூரியின் வணிக மேலாண்மை, துறை மாணவி செளமியா வரவேற்று பேசினார். துணை முதல்வர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

    • ராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழாவில் ஜோதிடர் கரு.கருப்பையாவின் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.
    • சிவகிரி பேராசிரியர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மதுரை

    பிரசித்தி பெற்ற ராமேசு–வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா நாளை (13-ந்தேதி, வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    விழாவையொட்டி கோவில் தெற்குவாசல் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிக–ளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் விழா–வின் சிறப்பு நிகழ்ச்சியாக நாளை (13-ந்தேதி) மாலை 6 மணிக்கு முதலாம் நாள் நிகழ்ச்சியாக கோவை சூலூர் ஏரோ சித்த மருத்து–வமனை கரு.கருப்பையா வழங்கும் உலகம் சிவமயம் என்ற தலைப்பில் ஆன்மீக் சொற்பொழிவு நடைபெறு–கிறது.

    இதையடுத்து பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா–வின் நடுவர் பொறுப்பில் நகைக்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் சிவகிரி பேராசிரியர் முனைவர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்துகொண்ட பேசுகி–றார்கள். முடிவில் பட்டி–மன்ற நடுவர் கரு.கருப் பையா தீர்ப்பு வழங்கு–கிறார்.

    • திருச்செங்கோட்டில் 42-வது ஆண்டு கம்பன் விழா கைலாசநாதர் கோயில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடைபெற்றது.
    • திருச்செங்கோடு கம்பன் கழகத்தின் தலைவர் ஜான் சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் 42-வது ஆண்டு கம்பன் விழா கைலாசநாதர் கோயில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு கம்பன் கழகத்தின் தலைவர் ஜான் சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளரும் கம்பன் கழகத்தின் துணைத் தலைவருமான பால தண்டாயுதபாணி வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு சஎம்.எல்.ஏ. ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்ட னர். தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக் கரசு, திருச்செங்கோடு வித்ய விகாஸ் கல்வி நிறுவனங்

    களின் தாளாளர் சிங்கார வேல் வாழ்த்தி பேசினார்

    ராமபிரானின் இதயத்தில் பெரிதும் இடம் பிடித்தவர்கள் உடன் பிறந்தோர், உடன் சேர்ந்தோர் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக ராமச்சந்திரன் பேசினார். உடன் பிறந்தோரே என்ற அணியில் பெருந்துறை ரவிக்குமார், திருப்பூர் தெய்வநாயகி பேசினார்கள். உடன் சேர்ந்தோரே என்ற அணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா ஜெயச்சந்திரன், ராஜபாளையம் உமா சங்கர் பேசினர்.

    திருச்செங்கோடு கம்பன் கழக செயலாளர் செங்குட்டுவேல் நன்றி கூறினார்.

    • கரு. கருப்பையா பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது.
    • இரவு 7 மணிக்கு ஓ.ஆர். கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குச்சம்பட்டியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் 120-ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி மதியம் அன்னதானமும், இரவு 9 மணிக்கு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா நடுவராக பங்கேற்கும் சிரிப்பு-பாட்டு பட்டிமன்றமும் நடக்கிறது.

    மதுரை கீழ மாரட் வீதி பந்தடி 4-வது தெருவில் உள்ள பழைய கோண அரசமரம் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.15 மணிக்குள் விமரிசையாக நடைபெறுகிறது.

    அன்று மாலை 6 மணிக்கு ஓ.வி ஆர்.எம்.ராஜ்குமார் தலைமையில் சிரிப்பு பட்டிமன்ற நடுவரும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பேரவை தலைவருமான திருப்புவனம் கரு.கருப்பையா பங்கேற்கும் நகைச்சுவை சொல் அரங்கம் நடக்கிறது.

    இதனையடுத்து இரவு 7 மணிக்கு ஓ.ஆர். கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    • குமளம் பகுதியை சேர்ந்த தமிழன் என்ற கல்லூரி மாணவன் வெற்றி பெற்றார்.
    • பாரதியாரின் கவிதையை பிழையில்லாமல் கூறியவர்களுக்கு ரூ.1000 பரிசாக வழங்கினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக தமிழில் பேசு தங்க காசு என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதில் 17-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் குமளம் பகுதியை சேர்ந்த தமிழன் என்ற கல்லூரி மாணவன் வெற்றி பெற்றார்.

    அவருக்கு 4 கிராம் தங்க காசுகளை பரிசாக ராமதாஸ் வழங்கினார்.மேலும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் பாரதியாரின் கவிதையை பிழையில்லாமல் கூறியவர்களுக்கு ரூ.1000 பரிசாக வழங்கினார்.உடன் தலைமை நிலைய செயலாளராக இசக்கி படையாட்சி,பா.ம.க பொருளாளர் திலகபாமா, கவிஞர் ஜெயபாஸ்கரன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.
    • புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பட்டிமன்றம் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் குமரேசன் ஏற்பாட்டில் மதுரவாயல், மதுரவாயல் வடக்கு பகுதி 147-வது வட்டம் புஷ்பா கார்டன் பகுதியில் நடைபெற்றது.

    பட்டிமன்றத்தை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன், மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளரும், எம். எல். ஏ. வுமான காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.

    வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது-பொருளே, புகழே என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பொருளே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், அருள்பிரகாஷ் ஆகியோரும், புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம். எல். ஏ., மதுரவாயல் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், 11-வது மண்டல குழு தலை வருமான நொளம்பூர் வே. ராஜன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் ஆலப் பாக்கம் கு.சண்முகம், 147-வது வட்ட செயலாளர் எஸ்.ஜி.மாதவன், பகுதி நிர்வா கிகள் பாலாஜி, செந்தில் சுரேஷ், உதயகுமார், அண்ணாதாசன், சசிகுமார், ஸ்டாலின், ஆலன், ரூபன், மதியழகன், கவுன்சிலர்கள் மாலினி, ரமணி மாதவன், பாரதி அண்ணா வேலன், செல்வி ரமேஷ், ஹேமலதா கணபதி, நிர்வாகிகள் ரமேஷ் ராஜ், ரமேஷ், புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நம்ம ஊரு நம்ம விழா 16ஆம் ஆண்டு விழாவாக நடைபெற்றது.
    • உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விழாவினை வாழ்த்தி பேசினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சார்பாக விழுப்புரம் மருதம் அமைப்பின் சார்பில் நம்ம ஊரு நம்ம விழா 16ஆம் ஆண்டு விழாவாக நடைபெற்றது. கடந்த 14 -ந்தேதி மாலை விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாலை 4 மணி அளவில் புத்தகக் கண்காட்சி மற்றும் தொல்லியல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் எழுத்தாளர் ஜோதி நரசிம்மன், கவிஞர் ஜெயச்சந்திரன், பேராசிரியர் த.பழமலை, ஆய்வாளர் சி வீரராகவன், எழுத்தாளர் செங்குட்டுவன், முனைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் நேற்று மாலை விழுப்புரம் மண்ணின் மைந்தர்கள் குழுவின் சார்பில் இசையமுழக்கம் மற்றும் திருவடுகூர் கைலாய வாத்திய குழுவினரின் இசைப்பொழிவு உள்ளிட்ட நிகழ்வுகளுடன் நிகழ்ச்சிதொடங்கியது. இந்த நிகழ்விற்கு எழுத்தாளர் இரா ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பல் சுவை நிகழ்வுகள் நடைபெற்றது தமிழர் பண்பாட்டில் முருகு என்கிற தலைப்பில் பாவலர் அறிவுமதி உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விழாவினை வாழ்த்தி பேசினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி,டாக்டர் லட்சு மணன், நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமை யில் தமிழுக்கு பெருமை அடிப்பது சங்க காலமே சமகா லமே என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடை பெற்றது மருதம் ஒருங்கி ணைப்பாளர் ரவி கார்த்தி கேயன் விழாவினை ஒருங்கிணைத்தார்.

    • திருமங்கலம் அருகில் உள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் பட்டிமன்றம் நடந்தது.
    • ‘‘இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

    மதுரை

    திருமங்கலம் அருகில் உள்ள ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் ஷகீலா ஷா ஆகியோது ஏற்பாட்டில் ''இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

    ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் நிர்மலாதேவி வரவேற்றார். கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார், துணை முதல்வர் பூஜா சக்கரபோர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த பட்டிமன்றத்தில் அன்னை பாத்திமா கல்விக்கு ழுமத்தின் தாளாளர் எம்.எஸ்.ஷா நடுவராகப் பொறுப்பேற்றார். இரு அணியினரும் பாடல், திரைப்படக்கதை, நடை உடை பாவனைகளை எடுத்து கூறி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.

    இருதரப்பு வாதங்க ளையும் சீர்தூக்கிப் பார்த்து இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன என்ற தீர்ப்பை நடுவர் வழங்கினார். இந்த பட்டி மன்றம் மாணவர்களின் சிந்தனை யைத் தூண்டியதோடு விழிப்புணர்வையும் ஏற்படு த்தியது.

    பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ராமுத்தாய் நன்றி கூறினார்.

    கல்லூரி ஒருங்கிணை ப்பாளர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனியாண்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தனர்.

    அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 113 சார்பில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டு கண்ணன் அவர்கள்- நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பேரில் ஆலம்பட்டி ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான பேரணியை அன்னை பாத்திமா கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    இதையொட்டி தூய்மை பணி வாகனம் ஒன்றும் கல்லூரின் சார்பில் ஆலம்பட்டி ஊராட்சி அலுவ லகத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் 260 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டு ஆலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனிடம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி , ஆலம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி சத்திரிய நாடார் உயர்நிலைபள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகாசனம் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது.

    ஹோமியோபதி மருத்துவர் அமுதா மூச்சுப்பயிற்சி மற்றும் பல்வேறு யோகாசனங்களை கற்றுக் கொடுத்தார்.

    இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • சோழவந்தானில் பட்டிமன்றம் நடைபெற்றது.
    • மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பது அன்றைய பாடல்களா? இன்றைய பாடல்களா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சி ஓட்டல் காபி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

    அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கடைவீதியில் கழுவேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குகசீலன் ரூபன் நடுவராக இருந்து இன்னிசை பட்டிமன்றம் நடத்தினார். மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பது அன்றைய பாடல்களா? இன்றைய பாடல்களா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது. தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க நிர்வாகி ஜவகர்லால் வரவேற்றார்.

    முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் ,துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், செந்தில்வேல், குருசாமி, சிவா ஆகியோர் பேசினர். துணைத் தலைவர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

    ×