search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படைவீரர்கள் பலி"

    ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 படைவீரர்கள் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆக்னூர் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியை அகற்ற முயன்றனர். அப்போது திடீரென கண்ணி வெடி வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் 2 படைவீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir
    பாகிஸ்தானில் நடந்த பயங்கர மோதலின்போது, 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். படைவீரர்கள் 2 பேரும் பலியாகினர். #Pakistan #TerroristKilled #KalatOperation
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. அங்கு லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி நெட்வொர்க் அமைப்பினர், தலீபான் இயக்கத்தினர், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.

    பாகிஸ்தானை சொர்க்கபுரியாக கருதி இந்த பயங்கரவாதிகள் அங்கு தங்கி பயங்கரவாத சதித்திட்டங்கள் தீட்டி, எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகாரை அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.



    இந்த நிலையில் அங்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் கலாத் என்ற இடத்தில் மங்கோசார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் அந்த மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

    இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அவர்களைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் தங்களது துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர்.

    ஆனால் அவர்களை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கூறியும் அவர்கள் அதைக் கேட்காமல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர்.

    இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இடைவிடாமல் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சண்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதே போன்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரும் பலியாகினர். அவர்களில் முகமது வாரிஸ், ஷாபான் ஜாங் பகுதியை சேர்ந்தவர் என்றும், மிர் ஆலம் ஜில்கித், பல்திதானை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ ஊடகப்பிரிவு ஐ.எஸ்.பி.ஆர். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத செயல்கள் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சிலர் சதி செய்து வருவதாக உளவுத்தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். படையினர் 2 பேர் பலியாகினர். அங்கிருந்து 2 கவச உடைகள், ஏராளமான வெடிபொருட்கள், பிற ஆயுதங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பலியான பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து எந்தத் தரப்பிலும் தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #Pakistan #TerroristKilled #KalatOperation
    அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 4 வீரர்கள் பலியாகினர். #ITBP
    இடாநகர்:

    அருணாசலப்பிரதேசம் மாநிலம் திப்ரூகர் மாவட்டத்தில் உள்ள லிகாபாலி பகுதியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் சுமார் 20க்கு மேற்பட்டோர் இன்று சென்று கொண்டிருந்தனர். 

    அங்கிருந்த சாலை வளைவில் திரும்பும்போது, திடீரென பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, காயமடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். #ITBP
    ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் சிரியா படைவீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ISAttack
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கடைசி நகரையும் கைப்பற்றினர்.

    இந்நிலையில், சிரியாவின் படியா பகுதியில் சென்ற படைவீரர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கார் குண்டு வெடிப்பு மூலம் தாக்குதல் நடத்தினர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் படைவீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் சிரியாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. #ISAttack #Tamilnews
    ×