என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பச்சிளம் குழந்தை மீட்பு"
- மொடக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
- தவறான முறையில் பிறந்த குழந்தையை அவர்கள் வீசி சென்றார்களா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் பட்டாசுபாளி அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அதே பகுதியில் உள்ளது.
இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த ரஞ்சித் (24) என்ற வாலிபர் மோகனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு வழியாக வேலைக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு மின்மோட்டார் அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.
இதுகுறித்து அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ஒரு தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை துணியில் சுற்றி வைக்கப்பட்டு வீசப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
பின்னர் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து குழந்தையை பார்த்தபோது குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆவது தெரியவந்தது. குழந்தையின் தலையில் ஈரம் காய்வதற்குள் வீசி சென்றிருப்பதும் தெரிய வந்தது. மேலும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மொடக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். எனவே தவறான முறையில் பிறந்த குழந்தையை அவர்கள் வீசி சென்றார்களா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இன்று அதிகாலை யாருக்காவது குழந்தை பிறந்ததா? என்றும் அந்த பகுதியில் கர்ப்பமாக இருந்த பெண்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்