search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுந்தேயிலை"

    • வால்பாறையில் 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.
    • நவீன எந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் 32,825 ஹெக்டேரில் தேயிலை, காபி மற்றும் மிளகு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக, தேயிலை செடிகள் துளிர் விட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.

    விரைவில் தென்மேற்கு பருவமழையும தொடங்கவுள்ளதால், அதற்கு முன்னதாக பசுந்தேயிலை பறிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பசுந்தேயிலை பறிக்க முடியாத நிலையில், நவீன எந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான எஸ்டேட்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால், காலை, மாலை நேரங்களில் தொழிலாளர்களுக்கு இன்சென்டிவ் அடிப்படையில் கூடுதல் நேரம் பணி வழங்கப்படுிறது.

    இதுகுறித்து தேயிலைத் தோட்ட அதிகாரிகள் கூறும் போது, 30 தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் எந்திரம் வாயிலாக தேயிலை பறிப்பதால் 6 தொழிலாளர்கள் கொண்டு பணி நடைபெறுகிறது.

    சம மட்ட எஸ்டேட்களில் மட்டுமே இது போன்ற எந்திரங்களைக் கொண்டு தேயிலை பறிக்க முடியும். மலைச்சரிவு கொண்ட இடங்களில் தொழிலாளர்கள் கத்தரி வெட்டு வாயிலாக தேயிலை பறிக்கின்றனர் என்றனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன.
    • தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நஞ்சநாடு மற்றும் இத்தலாா் ஆகிய கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்து தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

    நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. இத் தேயிலைத் தொழிற்சாலைகளில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினர்களாக இருந்து தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனா்.

    தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்து தரமான தேயிலைத் தூள் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வின்போது அலுவலா்களுக்கு அமைச்சா் ராமசந்திரன் அறிவுறுத்தினாா்.

    இந்த ஆய்வின்போது சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநரும், இண்ட்கோசா்வ் முதன்மை செயல் அலுவலருமான மோனிகா ராணா, ஊட்டி வட்டாட்சியா் ராஜசேகா், ஊட்டி ஊராட்சி ஒன்றியதலைவர் மாயன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். 

    ×