search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் பால்குடம்"

    • மேலூர் நாகம்மாள் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
    • திருவிழாவையொட்டி மேலூர் மெயின்ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலூர்

    மேலூர் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள நாகம்மாள் கோவிலின் ஆடி திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேலூர் மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரிய கடை வீதி, செக்கடி பஜார் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேர்த்திக்கடன் நேர்த்திய பக்தர்கள் 3 அடி முதல் 20 அடி நீளம் வரை உள்ள வாயில் அலகு குத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். நாளை மாலை பெண்கள் பங்கேற்கும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி மேலூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி தலைமையில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    ×