search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுதி நேர ரேசன் கடை"

    • நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன பாலம்பாக்கத்தில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.

    கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகலாகோபி, வெங்கடேசன், பாபு, ஒன்றிய கவுன்சிலர் லதாசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்து பேசினார்.

    இதனை தொடர்ந்து காட்டுப்புத்தூரில் புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, 4 ஆண்டுகளாக கோரிக்கையாக இருந்து வந்த பாப்பான்தோப்பில் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, சோழவரத்தில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    இதில் பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார் துணை தலைவர் ஜீவசத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெங்கட்டம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடையை தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரிசிகளை வழங்கினார்.
    • பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டம் பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை வேண்டுமென கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தடங்கம் சுப்பிரமணி, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தார்.

    மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த முதலமைச்சர் இடத்திலும், வெங்கட்டம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வெங்கட்டம் பட்டியில் பகுதி நேர ரேஷன் கடைக்கு அனுமதி வழங்கியதை அடுத்து நேற்று வெங்கட்டம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடையை தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரிசிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம், மாதேமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், தி.மு.க. மகளிர் அணி முத்துலட்சுமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×