search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் தடுத்தல்"

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவிய டாக்டர்களுக்கு தங்கப்பதக்கமும் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #Nipahvirus
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பாதிப்புகளின் தாக்கத்தை உணர்ந்து மாநில அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது நிபா காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

    இந்நிலையில், தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாமல் நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கேரள அரசு பரிசு மற்றும் உதவித்தொகையை அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நான்கு உதவி பேராசிரியர்கள், 19  செவிலியர்கள், 7 செவிலியர் உதவியாளர்கள், 17 துப்புரவு ஊழியர்கள், 4 மருத்துவமனை ஊழியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள், 3 ஆய்வக நபர்கள் உள்ளிட்ட 61 பேருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    டாக்டர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்த போது நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த செவிலியர் லினிக்கு கேரள அரசின் சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட உள்ளது. #Nipahvirus
    நிபா வைரஸ் நோயை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    நிபா வைரஸ் நோயை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் கூறியதாவது:-

    நிபா வைரஸ் என்பது தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் நோயை விளைவிப்பதற்கு காரணமாக இருந்து வருகிற ஒரு பாராமைக் ஸோவைரஸ் நோய்க்கிருமியாகும்.

    1998-99 ஆண்டு வாக்கில் மலேசியா, சிங்கப்பூரில் இத்தொற்று பரவியபோது இது முதன் முறையாக அடையாளம் காணப்பட்டது. மற்றும் இத்தொற்றுநோய் தொடங்கிய கிராமத்தின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது.

    தொற்று பாதிப்புள்ள பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். சமைக்காத உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்கவும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு மட்டும் சாப்பிடவும்.

    ஆரஞ்சு மற்றும் வாழைப் பழங்கள் போன்ற பழங்கள் அவைகளை பாதுகாப்பாக வைக்கிற உறுதியான தோல்களை கொண்டிருக்கின்றன. ஆப்பிள்கள் மற்றும் ஆரஞ்சு பழங்களை பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு கழுவி சுத்தப்படுத்திய பிறகு உட்கொள்ளலாம். பொதுவாக சேதமடைந்துள்ள அல்லது ஓட்டை விழுந்துள்ள, கடிக்கப்பட்டுள்ள பழங்களை ஒருபோதும் உண்ண வேண்டாம்.

    காய்ச்சல், தலைவலி, தூக்கக் கலக்கம், சூழல் உணர்விழப்பு மற்றும் பிதற்றல் ஆகிய அறிகுறிகள் தொடங்கிய பிறகு 3 முதல் 14 நாட்களுக்குள் நிகழக்கூடும். இது வளர்ச்சியடைந்து 24 முதல் 48 மணி நேரங்களில் நினைவிழப்பு நிலையான கோமாவில் கொண்டுபோய் விடக்கூடும். நுரையீரல் பிரச்சனைகளாக இந்நோய் வெளிப்படுவது பொதுவாக நிகழ்வதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #NipahVirus
    ×