search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேருக்கு நேர்"

    • சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(60) பால் வியாபாரி.
    • நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் கந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(60) பால் வியாபாரி. இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு காரைக்கால் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடித்து விட்டு காரைக்கால் பஸ் நிறுத்தம் அருகே நாமக்கலில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் கந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கந்தசாமி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவர் மீது மோதிய மோட்டார்சைக்கிளில் வந்த

    2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீசார் கந்தசாமியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பரமத்தி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் மனைவி கண் முன் தொழிலாளி பலி்யானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பெரியகரசப்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் அருண் ( வயது 27) கூலி தொழிலாளி.

    இந்த நிலையில் அருண்குமாரும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் வந்துள்ளனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் பொய்யேரி அருகே ஒழுகூர்பட்டி பிரிவு சாலையில் திரும்ப‌ முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் அருணின் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் அருண் தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதனை கண்டு அவரது மனைவி கதறி அழுதார். சிறிது நேரத்திலேயே அருண் பரிதாபமாக இறந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அருண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த‌ அவரது மனைவி ஐஸ்வர்யா அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தேவராஜ் (27) காயம் அடைந்தார். இவர் நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×