search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேகா சக்சேனா"

    துபாயில் வசிக்கும் நபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை நேகா சக்சேனா ‘மீ டூ’ மூலம் புகார் தெரிவித்துள்ளார். #MeToo #NehaSaxena
    மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘கசபா’, மோகன்லால் நடித்த ‘முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நேகா சக்சேனா. தமிழில், நீ என்ன மாயம் செய்தாய், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒரு மெல்லிய கோடு’, லொடுக்கு பாண்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் நேகாவின் மேனேஜருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினார். அதில் ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அந்த வாட்ஸ்அப் செய்தியை நேகா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு அந்த நபரை மீடூ மூலம் அடையாளம் காட்டியுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்த நாய்க்கு பாடம் கற்பிக்க இதை நான் அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்புகிறேன். அவர் பெண்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை அவரின் குடும்பம் தெரிந்து கொள்ளட்டும். இது போன்ற வி‌ஷயங்களுக்கு எதிராக பேச நான் பயப்படவில்லை. ஒரு நடிகை என்பதையும் தாண்டி நான் ஒரு பெண்.



    ஒரு பிரபலமாக இருந்து கொண்டு இதற்கு எதிராக நான் குரல் கொடுக்கவில்லை என்றால் இதுபோன்ற சங்கடங்களை அனுவிக்கும் சாதாரண பெண்ணுக்கு நான் எந்த மாதிரியான முன் உதாரணமாக இருக்க முடியும்? இந்தியா மாற வேண்டும் என்கிறோம்.

    ஆனால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் பொறுப்பேற்றால் தான் இந்தியா மாறும். அப்படி செய்தால் தான் சில நாய்கள் காணாமல் போகும். இன்னொரு நிர்பயா, ஜிஷா இருக்காது. நான் எனக்காகவும், பிற பெண்களுக்காகவும் குரல் கொடுக்கிறேன். இது தான் நான். நான் மாற மாட்டேன்’.

    இவ்வாறு நேகா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    நேகா தன்னை அழைத்த நபரின் முகவரியை கண்டுபிடித்து அதையும் வெளியிட்டுள்ளார். அந்த நபரின் பெயர் எல்சன் லோகிதட்சன். நேகாவின் பதிவுகளை பார்த்த எல்சன் தனது செல்போனை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    எல்சன் பொய் சொல்வதாக நேகா கூறி இருக்கிறார். #MeToo #NehaSaxena

    ×