என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெல்லை சந்திப்பு பஸ் நிலையம்"
நெல்லை:
பாளை அருகே உள்ள மேலபாட்டம் கிராமத்தை அடுத்த கொட்டாரத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வினோத் (வயது30). மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் வாசுதேவன் பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவி- மகனை பிரிந்து மும்பை சென்று விட்டார்.
இதனால் வருமானம் இன்றி தவித்த வாசுதேவனின் மனைவியும் எங்கோ சென்று விட்டார். இதனால் வீடு இன்றி தவித்த வினோத் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். தினமும் இரவில் பஸ் நிலையத்தில் உள்ள ஏதாவது ஒரு கடையின் முன் படுத்து தூங்குவார்.
நேற்று இரவு இவர் மது குடித்து விட்டு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் மேற்கு வாசல் அருகே உள்ள கடை முன்பு படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில் அங்கு வந்த மர்ம கும்பல், இரும்பு கம்பியால் அவரை தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமானார்.
இன்று காலை அந்த பகுதி வியாபாரிகள் கடையை திறக்க வந்தபோது, அங்கு வினோத் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி, சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றனர்? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத் பொதுவாக பஸ் நிலைய பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களிடம் மிரட்டி பணத்தை அபகரித்து, மது குடிப்பதும், கஞ்சா அடிப்பதுமாக இருந்துள்ளார். அவர்களிடம் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றால் பஸ் நிலையத்துக்கு வரும் அப்பாவி பயணிகளையும் மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இதனால் பஸ் நிலைய பகுதிகளில் வழக்கமாக படுத்து தூங்கும் பிச்சைக் காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோத் பிச்சைக்காரர்களிடம் பணத்தை அபகரித்து மது குடித்து வந்ததால், சில பிச்சைக்காரர்களே சேர்ந்து வினோத்தை கொலை செய்து இருக்கலாமா? அல்லது அவரால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்