search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்கதிர்கள்"

    • நெற்கதிர்களை அறுத்து காய வைக்க எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் உலர்த்தும் தளம் இல்லை.
    • பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளிலும் நெற்களை காயவைப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    வேதாரண்யம்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி ஒரளவு மகசூல் கிடைத்துள்ளது.

    இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை அறுத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது அதிக ஈரபதத்துடன் நெல் உள்ளது என்று திருப்பி அனுப்ப படுகின்றனர்.

    வேதாரண்யம் பகுதி விவசாயிகள் தங்களது நெற்கதிர்களை அறுத்து காய வைக்க எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் உலர்த்தும் தளம் இல்லை.

    எனவே விவசாயிகள் நெல்மணிகளை கிராமபுறம் உட்பட பல்வேறு இடங்களில் பிரதான போக்கு வரத்து சாலைகளில் கொட்டி காய வைக்கின்றனர்.

    தற்போது பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளிலும் நெற்களை காயவைப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    சில நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் விவசாயிகளுக்கு சிறு பிரச்சனைகள் நடக்கிறது.

    எனவே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் தூற்றும் மிஷின் இருப்பது போல நெல் காயவைக்கும் மிஷின்களை (டிரையர்) அரசே ஏற்று அமைத்து ெகாடுக்க வேண்டும்.

    விவசாயிகள் கொண்டுவரும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த நெல்லை கொள்முதல் செய்துவிவசாயிகள் நலன்காக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வயல்களில் சாய்ந்துள்ள நெற்கதிர்களில் உள்ள மணிகள் முளைவிட தொடங்கி விடும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    • கொள்ளிட கரையோர கிராமங்களில் 200 ஏக்கர் வாழை பயிர்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் இடைவிடாது மழை கொட்டியது.

    இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இன்று பல இடங்களில் விட்டு விட்டு தூறி கொண்டே இருந்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் மெலட்டூர், கொத்தட்டை, அனன தோட்டம், புலவர்நத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தும், மழைநீரில் மூழ்கியும் சேதம் அடைந்துள்ளன.

    மேலும் வயல்களில் சாய்ந்துள்ள நெற்கதிர்களில் உள்ள மணிகள் முளைவிட தொடங்கி விடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கொள்ளிடம் ஆற்றில் செல்லும் அதிகப்படியான தண்ணீரால் ஆச்சனூர், மருவூர், வடுகக்குடி உள்ளிட்ட கொள்ளிட கரையோர கிராமங்களில் 200 ஏக்கர் வாழைப் பயிர்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் வேர் அழுகி வாழை பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே நெல்லை போல வாழைக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்.

    தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட வாழை பயிர்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து வெயில் அடித்தால் மட்டுமே நெற்பயிர்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×