search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரியில் மழை"

    • ஊட்டி நகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியது.
    • சாலைகளில் இருந்த குழிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.

    குன்னூர்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கனமழை கொட்டி தீர்த்தது.

    இதை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்ததுடன், இதமான காலநிலையும் நிலவி வந்தது.

    இந்த கால நிலையை அனுபவிக்க சமவெளி பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். இதனால் அனைத்து சுற்றுலா தலங்களுமே களைகட்டி இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவையில் ஓரிரு நாட்கள் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இதன்படி நேற்று காலை நன்றாக வெயில் அடித்த நிலையில், மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் ஊட்டி நகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.

    மழையுடன் கடும் பனிமூட்டமும் நிலவியது. பகல் வேளையே இரவு போல காட்சியளித்தது. எதிரே வரும் எந்த வாகனங்களும் தெரியவில்லை.

    இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். இதன்காரணமாக சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அருவங்காடு, வண்டிச்சோலை, பர்லியார் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நீலகிரியில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்து இருப்பதால், கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • ஊட்டியில் தலைக்குந்தா பகுதியில் மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டனர்.
    • மின் இணைப்புகள் சேதமடை–ந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழி–யா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் நில நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோா் ஊட்டி வந்தனர்.

    வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரனுடன் ஊட்டி மற்றும் கூடலூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    ஊட்டியில் தலைக்குந்தா பகுதியில் மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டனர்.

    பின்னர் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் நிருப–ர்களிடம் கூறியதாவது:-

    மாவட்டத்தில் மழையால் எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் அதிகம் உள்ளதோ அந்த இடங்களில் எதிா்காலத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த பின், அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பேரிடா் மீட்புக் குழுவினா் 80 போ் அரக்கோணத்தில் இருந்து நீலகிரிக்கு வந்துள்ளனா். இவா்களில் 40 போ் உதகையிலும், 40 போ் கூடலூரிலும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு–ள்ளனா். தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவும் பேரிடா் மீட்புப் படையினா் வரவழைக்கப்படுவா்.

    கூடலூா் பகுதிகளில் மழையால் பாதிப்படைந்து முகாம்களில் தங்க–வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்புகள் சேதமடை–ந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழி–யா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    சனிக்கிழமைக்குள்(இன்று) இந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் உடனிருந்தனா்.

    ×