search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை"

    • கடந்த சில நாட்களாக கேரளாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
    • முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    பருவமழை கைகொடுத்த நிலையில் முல்லை பெரி யாறு அணை நீர்மட்டம் 140 அடி வரை உயர்ந்தது . அதனை தொடர்ந்து தமிழக பகுதிக்கும் கேரளாவுக்கும் கூடுதல் தண்ணீர் திறக்க ப்பட்டது.

    மேலும் மழையும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரியத்தொடங்கி யது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்பி டிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 1081 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 135.95 அடியாக உள்ளது. 933 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. 728 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்தி ற்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.47 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படு கிறது.

    பெரியாறு 18.2, தேக்கடி 13.2, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 3.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கூடலூர், கம்பம், உத்தம பாளையம் பகுதியில் இன்று காலையில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பொது மக்கள், மாணவ-மாணவி கள் சிரமமடைந்தனர்.

    ×