search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வு பயிற்சி"

    • அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் 133 பள்ளிகளில் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

    ஈரோடு:

    அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ் படிக்க வழிவகை செய்யும் விதமாக அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜெ.இ.இ. பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி தொடங்குகிறது.

    இது குறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, எலைட் பள்ளி என 133 பள்ளிகளில் நீட், ஜெ.இ.இ. பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. வகுப்பை காலை அல்லது மாலை நேரத்தில் நடத்தி கொள்வது குறித்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் பயிற்சி வகுப்பு நடக்கும். வெள்ளிக்கிழமை தேர்வு குறித்த மதிப்பீடு நடக்கும். இதே நடைமுறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு பயிற்சி வகுப்பாக மட்டும் நடந்தது. இந்த ஆண்டு பயிற்சி வகுப்புடன் தினமும் தேர்வும் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 16 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது.

    இந்த மையங்களில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் கிறிஸ்துமஸ் அரையாண்டு தேர்வு நிறைவு என்பதால் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக நேற்று ஒரு நாள் மட்டும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறவில்லை.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் வரும் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் 16 மையங்களில் நடக்கிறது.

    காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன .

    இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வழங்குகிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு 20 மாணவர்களும் என ஒன்றியத்துக்கு 70 மாணவர் தேர்வு செய்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மாணவருக்கு மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒன்றியத்துக்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து சனிக்கிழமை தோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நவம்பர் மூன்றாவது வாரம் பயிற்சி வகுப்பு துவங்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். நேரடி வகுப்புகளாக நடத்தப்படும். மாணவரின் வருகை மற்றும் மதிப்பெண் பதிவுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றனர்.

    ×