search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலஅபகரிப்பு புகாரில் ஒருவர் கைது"

    • இடத்தை காலி செய்ய மறுத்தவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் நில அபகரிப்பு புகாரில் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காந்திநகர் வினோபா நகரை சேர்ந்தவர் முருகன்(55). இவர் வீட்டின் அருகே சுப்பிரமணி என்பவரது காலிஇடம் உள்ளது. அந்த இடத்தில் பல ஆண்டுகளாக தனது வாகனங்களை நிறுத்தி வந்தார். தற்போது அந்த இடத்தை காலி செய்து தருமாறு முருகனிடம் சுப்பிரமணி கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் இடத்தை காலி செய்ய மறுத்து கால தாமதம் செய்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். அதன்பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் முருகன் சுப்பிரமணியின் இடத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    ×